தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனி ஒருவன் படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் மோகன்ராஜா.
அவர் பேசியதாவது…
“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பேன். எனக்கு கிடைத்த பெற்றோர் முதல் அனைவரும் அதற்கு காரணம்.
என் வாழ்க்கையில் நான் எப்போதும் கஷ்டப்பட்டது இல்லை.
சொல்லப்போனால் நான் பிறக்கும்போதே ஒரு டைரக்டராகத்தான் பிறந்தேன்.
சினிமாவில் எனக்கு பின்னணி இருந்தது. எனவே அதிக பொறுப்பு இருந்தது. எந்த இயக்குனரும் முதலில் தனக்கு பிடித்த கதையை படமாக்க முடிவதில்லை.
தயாரிப்பாளருக்கு அந்த கதை பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. எனவே தயாரிப்பாளருக்காக படம் இயக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவேதான் நானும் முதலில் சில ரீமேக் படங்களை இயக்கினேன். சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களுக்கு நல்ல தாக்கம் ஏற்பட்டது.
சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை நான் நிலைநிறுத்திக் கொள்ள சில படங்கள் தேவைப்பட்டது.
அதன்பின்னரே தன் ஒருவன் படம் போன்ற சமூக பிரச்சினைகளை சொல்ல முடிந்தது.
இன்று அருவி படம் ஒருவாரம்தான் ஓடும். உடனே பார்த்து விடுங்கள் என்கிறார் தயாரிப்பாளர்.
சினிமா அப்படி ஆகிவிட்டது. வேலைக்க்காரன் படமும் அப்படிதான். 2, 3 வாரங்கள் ஓடும்.
ஏனென்றால் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியவை உள்ளது.
என்னை பொறுத்தவரை தமிழ் ராக்கர்ஸ் சிறந்த மூளைக்காரன். அவர் மிகச்சிறந்த வேலைக்காரன் என்பேன்.
இரவு பகல் பாராமல் வேர்வை சிந்தி அந்த படத்தை வெளியிடுகிறார்கள்.
ஆனால் அவர் சிறந்த வேலைக்காரன் என்றால், எங்கள் படத்தை தாமதாக இணையத்தில் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்று பேசினார்.