கமல்ஹாசன் & லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ அந்த மாதிரியான படமா.?

கமல்ஹாசன் & லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ அந்த மாதிரியான படமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram movieமாநகரம் & கைதி படங்களை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் & விஜய்சேதுபதி இருவரும் இணைந்த இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி 10 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் லோகேஷ் தனது அடுத்த படத்தின் பணிகளை இன்னும் கவனத்துடன் மேற்கொண்டு வருகிறார்.

கமல்ஹாசனின் 232வது படமான ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

இப்படத்தின் டைட்டில் லுக் வித்தியாசமான முறையில் உருவாகி வெளியானது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக ஒரு பேட்டியளித்துள்ளார் லோகேஷ்.

அதில்…

#விக்ரம் துப்பாக்கி GUN சம்மந்தமான படம். சொல்லப் போனா கைதி போல எக்ஸ்பிரிமெண்ட் சென்டிமென்ட் ஆக்சன் படம். கமல் சாரோட ஆக்சன் ரொம்ப பிடிக்கும். அவரை முழுக்க முழுக்க ஆக்சன்ல பாத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

அதனால நான் இந்த வாய்ப்ப தவறவிடமாட்டேன்.. “விக்ரம்’ படம் ஆக்சன் ஆக்சன் ஆக்சன் தான்”

என தெரிவித்துள்ளார் இந்த மாஸ்டர் டைரக்டர்.

Director Lokesh Kanagaraj talks about his next film VIKRAM

JUST IN சசிகலாவுக்கு கொரோனா தொற்று..; அரசு மருத்துவமனையில் அனுமதி.!

JUST IN சசிகலாவுக்கு கொரோனா தொற்று..; அரசு மருத்துவமனையில் அனுமதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்தது.

இதனையடுத்து மறைந்த ஜெயலலிதாவைத் தவிர மீதமுள்ள 3 பேரும், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவு பெறவுள்ளது.

எனவே சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்? என்று கேள்வி எழுந்தது.

விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் கடந்த மாதம் அபராத தொகையை செலுத்தினார் சசிகலா.

அதன்படி ஜனவரி 27 காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை.

இந்தநிலையில் நேற்று ஜனவரி 20ஆம் தேதி சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக சிறை வளாகத்திலுள்ள டாக்டர்கள் அவருக்கு சிகிச்சையளித்தனர்.

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என தகவல்கள் வந்துள்ளன. இந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 21ஆம் தேதி சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வருகிற 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அவருக்கு கர்நாடகா விக்டோரியா அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது

காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாம்.

கொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரம் சசிகலா மருத்துவமனையில் இருப்பார் எனத் தகவல் வந்துள்ளது.

Sasikala tests positive for COVID19

உடல்நிலை சரியில்லை… விரைவில் சந்திக்கிறேன்… – ‘பிக்பாஸ் வின்னர்’ ஆரி

உடல்நிலை சரியில்லை… விரைவில் சந்திக்கிறேன்… – ‘பிக்பாஸ் வின்னர்’ ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari (3)பிக்பாஸ் 4 சீசனில் வெற்றி பெற்றார் நடிகர் ஆரி.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வெற்றிக் கோப்பையுடன் ‘எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே’ என ஆரியும் நன்றி கூறினார்.

இந்த நிலையில் நடிகர் ஆரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில்…

“எனக்கு உடல்நிலை சரியில்லை. டிக்கெட் டாஸ்க் முதலே எனது உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.

விரைவில் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி.

நேர்மைக்கு நீங்கள் கொடுத்த வெற்றி. நான் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

விரைவில் சோஷியல் மீடியா வாயிலாக சந்திக்கிறேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக தேர்வு செய்து அன்புடன் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Aari says he will meet his fans soon

ஆப்பரேசன் சக்ஸஸ்.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்

ஆப்பரேசன் சக்ஸஸ்.. நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanசில மாதங்களுக்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.

அப்போதே அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பின்னர் அரசியல் கட்சிப் பணி, இந்தியன் 2 சூட்டிங், மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் கமல்.

இதன்பின்னர் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார் கமல்ஹாசன்.

இதன்படி காலில் நேற்று முன்தினம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இதனையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் கமல்.

இந்த நிலையில் நாளை ஜனவரி 22ஆம் தேதி கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

இதன் பின்னர் வீட்டில் சில நாட்கள் கமல்ஹாசன் ஓய்வெடுக்க உள்ளார் என கூறப்படுகிறது.

Kamal Haasan will be discharged tomorrow

ராஜமெளலி & மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை படமாக்கும் ஷங்கர்.?

ராஜமெளலி & மணிரத்னம் பாணியில் வரலாற்று கதையை படமாக்கும் ஷங்கர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director shankarராஜமௌலி இயக்கிய சரித்திர படமான ‘பாகுபலி 1 & 2’ மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது அதே பாணியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

தற்போது முதன்முறையாக சரித்திர பட கதைக்கு தன் கவனத்தை திருப்பியிருக்கிறார் ஷங்கர்.

இதுவரை அனிமேசன் கிராபிக்ஸ் படங்களை மட்டுமே மிக பிரம்மாண்டமாக இயக்கியவர் ஷங்கர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.

இதன் சூட்டிங் 60% முடிவடைந்துவிட்டதாம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இப்படி சூட்டிங்கில் கமல் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.

தன் புதிய சரித்திர படத்தில் 3 தென்னிந்திய ஹீரோக்களை இணைக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

Director Shankar’s next film details

சரித்திர படத்தில் சமந்தாவை நாயகியாக்கும் ‘ருத்ரமா தேவி’ பட இயக்குனர்

சரித்திர படத்தில் சமந்தாவை நாயகியாக்கும் ‘ருத்ரமா தேவி’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samanthaஅனிமேஷன் படங்களை போல சரித்திர படங்களுக்கும் தற்போது மவுசு அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில் ‘சகுந்தலை’ என்ற புராண கதையும் சினிமாவாக தயாராகி வருகிறது.

சகுந்தலை என்ற டைட்டில் ரோலில் சமந்தா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் மலையாள நடிகர் தேவ் மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு ‘சகுந்தலம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

Actress Samantha to romance a young hero in an epic movie

More Articles
Follows