தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்த படம் ‘அவன் இவன்’.
கடந்த 2011ல் இந்த படம் ரிலீசானது.
இப்படத்தில் நெல்லை மாவட்ட சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனால் சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் மன்னிப்பு தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக இருந்த நிலையிலும் இயக்குனர் பாலா ஆஜராகவில்லை.
எனவே இன்று பாலா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார் நீதிபதி.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குனர் பாலா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக பாலா பேசும்போது…” பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ததற்கு நன்றி” என்றார்
ஆனால், சிங்கம்பட்டி இளைய ஜமீன் சங்கராத் மஜனிடம் ஆலோசனை பெற்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
Director Bala released in Avan Ivan movie case