தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் மாறன்.
சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் பைத்தியமாக நடித்திருந்தார்.
‘இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல..’ என்ற வசனம் இவரை தற்போது இன்னும் பிரபலமாக்கியுள்ளது.
இந்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாறன் கூறியுள்ளதாவது…
‘நான் பல வருடங்களாக சந்தானம் டீமுடன் இருக்கிறேன்.
அதனால் சிவகார்த்திகேயன் அவருடைய படங்களில் நடிக்க அழைக்க மாட்டார்.
விவேக்குடன் பல படங்களில் நடித்த செல் முருகன் மற்ற நடிகர்கள் படத்தில் (விவேக் அல்லாத படங்களில்) நடிக்க மாட்டார்.
ஆனால் நான் அப்படியில்லை. என்னை சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் நடிக்க அழைத்தால் நடிப்பேன்” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Dikkiloona fame Maaran talks about working with Sivakarthikeyan