தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முதன்முறையாக சந்தானம் 3 வேடங்களில் நடிக்க கார்த்திக் யோகி இயக்கியிருந்த படம் “டிக்கிலோனா”.
இந்த படத்தில் ஹாக்கி ப்ளேயர், EB மணி ஆகிய கேரக்டர்களில் நடித்திருந்தார் சந்தானம்.
கடந்த வாரம் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
கெஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பாக ராஜேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
இந்த நிலையில், படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை ஹீரோ சந்தானம் “ஏய் சைட் ஸ்டாண்டு” என்று அழைப்பார்.
இயற்கையில் அப்படி ஒரு பிறப்பு கிடைக்கையில் மாற்றுத் திறனாளிகள் என்ன செய்ய முடியும். நம்மால் அப்படி ஒரு நாள் வாழ முடியுமா? என்பதை நினைத்து பார்க்க கூட முடியாது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் மன வலியை யாரால் தீர்க்க முடியும்.?
இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் படத்தின் வெற்றியை சந்தானம் & ராஜேஷ் குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், இதுவரை இந்த செயலுக்கு தயாரிப்பு தரப்பான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமோ ஹீரோவான சந்தானமோ ஒரு வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Will Santhanam apologize for controversy scene in Dikkiloona film ?