தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர்.
இவர்தான் தனுஷின் D44 படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். தங்கமகன் படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் அனிருத் இணையும் படமிது.
தனுஷின் இந்த புதிய படத்தில் நித்யா மேனன் & ராஷி கண்ணா & பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.
மேலும் தனுஷுடன் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
இன்று சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இப்பட டைட்டில் லுக் இன்று வெளியாகும் என நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது.
அதன்படி தனுஷின் 44வது திரைப்படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ என்ற படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் தனுஷ்.
அடுத்த செப்டம்பர் மாதத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்..: உங்களை பார்த்து யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என அர்த்தம் உண்டு.
தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில் புராணம் சொல்கிறது.
Dhanushs D44 movie Title look revealed