தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷின் வுண்டர்பார் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் வடசென்னை.
மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இதற்காக சென்னையில் மிக பிரமாண்டமாக ஜெயில் செட் ஒன்று போடப்பட்டு அங்கு அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வெற்றிமாறனின் கனவுப்படம் என கூறப்படும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதில் தனுஷுடன் சமந்தா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதில் தனுஷ் கேரம் விளையாட்டு ஆடுபவராக நடிக்கிறாராம். இதற்காக கேரம் விளையாட்டு வீரர் உதவியுடன் பயிற்சி எடுத்து வருகிறார்.
வட சென்னை மக்களுக்கும் கேரம் விளையாட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.