தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில மாதங்களுக்கு முன்னால் பெண்கள் பாலியல் சம்பந்தமான ‘மீடூ’ விவகாரத்தில் ராதாரவிக்கும் சின்மயிக்கும் மோதல்கள் வெடித்தன.
சின்மயி கூறிய புகார்களை ராதாரவி கடுமையாக விமர்சித்தார்.
இந்த மோதல் வலுக்கவே சின்மயி சந்தா செலுத்தவில்லை என கூறி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி.
பின்னர் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் உறுப்பினர் ஆனார்.
பாலியல் தொல்லைக்கும் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் தரலாம்… சின்மயி எதிர்ப்பு
இந்த நிலையில் விரைவில் டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற உள்ளது.
தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சுமார் 1600 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்துவருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு இதற்கான தேர்தல் நடைபெற்றது.
தற்போது அவரின் பதவி காலம் முடிவதால் வரும் பிப்ரவரி 15ந்தேதி சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
தலைவர் பதவிக்கு ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து ராமராஜ்யம் என்ற அணி பெயரில் பாடகி சின்மயி களம் இறங்குகிறார்.
அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.