தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனியார் பல்கலைக்கழகம் SRM சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு நாளை டிசம்பர் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது கடந்த ஆண்டே நிறைய பாலியல் புகார் அளித்திருந்தார் பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி.
இந்த நிலையில் டாக்டர் பட்டம் வழங்கவுள்ள நிகழ்ச்சி அழைப்பிதழை தனது டுவிட்டர் பகிர்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் கொடுக்க போகிறாராம்.
துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை வழங்கப்பட்டுள்ளது.
கவுரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத் திறனுக்காக வழங்கப்படுகிறது.
இத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.
உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க. வெல்டன் SRM பல்கலைக்கழகம்” என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
“வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள்” என்றும் கூறி உள்ளார்.
Yes, I know this doctorate is for his prowess in the language which is well established.
The way he went on, they might as well add a doctorate for being a serial molester.
Also well done, SRM. You couldn’t have chosen a better example for your students on ‘Role Model’ 2/3
— Chinmayi Sripaada (@Chinmayi) December 26, 2019