அஜித்-விஜய் படம் நான் பண்ணல; சாவடிக்கிறாங்க.. – சுரேஷ் காமாட்சி குமுறல்

அஜித்-விஜய் படம் நான் பண்ணல; சாவடிக்கிறாங்க.. – சுரேஷ் காமாட்சி குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchi slams theater owners in issue of Miga Miga Avasaramஸ்ரீபிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்‘.

இதில் ஸ்ரீ பிரியங்காவுக்கு ஜோடியாக அரீஷ்குமார் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் சீமான் நடித்திருந்தார்.

இப்படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் இதன் ரீலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது 150க்கும் அதிகமான தியேட்டர்களில் நவம்பர் 8-ம் தேதி ‘மிக மிக அவசரம்‘ வெளியானது.

இதனிடையில் தியேட்டர்கள் கிடைத்தாலும் காட்சிகள் அனைத்துமே காலையில்தான் போடப்படுகிறது. அதாவது 11:30 மணி, மதியம் 2:00 மணி காட்சிகளாகவே இருக்கின்றன.

இது தொடர்பாக ‘மிக மிக அவசரம்‘ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி கோபமாக தெரிவித்துள்ளதாவது…

“கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே அப்படித் தான் ஆகிப் போச்சு.

திரையரங்குகள் ‘மிக மிக அவசரம்’ படத்திற்குக் கிடைத்தது. காலை ஷோ, மதிய ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார், அஜித் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க..” என தெரிவித்துள்ளார்.

Suresh Kamatchi slams theater owners in issue of Miga Miga Avasaram

சுசித்ரா காணவில்லை என தங்கை புகார்.; என்ன தான் நடக்குது?

சுசித்ரா காணவில்லை என தங்கை புகார்.; என்ன தான் நடக்குது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am not missing says singer Suchithra to Policeபாடசி சுசித்ரா என்பதை விட சுசீ லீக்ஸ் என்றால் எல்லாருக்கும் தெரியுமளவுக்கு பிரபலமானவர் தான் இவர்.

இவர் காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை சுனிதா அடையாறு போலீசில் கடந்த 11-ந்தேதி புகார் அளித்திருந்தார்.

போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் சுசித்ராவின் செல்போன் நம்பரும் இருந்தன.

இதை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது சுசீத்ரா அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருப்பது தெரியவந்தது.

நான் மாயமாகவில்லை. ஓட்டலில் ஓய்வு எடுக்க சென்றேன். என தெரிவித்துள்ளார் சுசீத்ரா.

அப்படியென்றால் அவரது தங்கை ஏன் புகார் அளித்தார்? என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியவில்லை.

I am not missing says singer Suchithra to Police

ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது.

ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Auto shankar teamடிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் வேளையில் Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்த ஆட்டோ சங்கர் வெளியானபோதே பலரது கவனத்தையும் ஈர்த்தது. மனோஜ் பரமஹம்ஷா மேற்பார்வையில் அசரடிக்கும் உருவாக்கத்தில் திரைப்படத்திற்கு இணையான தரத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஆட்டோ சங்கர் பலரது பாராட்டையும் பெற்ற நிலையில் இப்போது MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றுள்ளது.

விருது பற்றி மனோஜ் பரமஹம்ஷா கூறியதாவது…
இது தான் தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் முதல் தரமான ஒன்று. Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் என்னுடன் இணைந்து இதனை தயாரித்திருந்தார். நாங்கள் இதனை தயாரித்தற்கு பெருமை கொள்கிறோம். நாங்கள் மொத்த சீரிஸையும் பற்பல முன் தயாரிப்புகளுடன் 35 நாட்களில் சென்னையை சுற்றி ஷூட்டிங் முடித்தோம். ஆனால் கதையில் காலத்தை கொண்டு வருவதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் உழைத்தோம். 1985 முதல் 1990 வரையிலான காலத்தை கண் முன் கொண்டு வருவதற்கு பெரும் பாடுபட்டோம். இது பெரிய அளவில் கவனம் பெற்று சினிமாத்துறையில் இருந்து பலரும் பாராட்டினார்கள். தமிழின் மிகச்சிறந்த இயக்குநர் வெற்றிமாறன் இதனை தனியாக குறிப்பிட்டு பாரட்டினார். இப்போது எங்களது சிரீஸ் அடுத்த கட்ட பாராட்டை பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி. மும்பையில் நேற்று நடந்த விழாவில் சிறந்த பிராந்திய மொழி சீரிஸ் பிரிவில் ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS விருதை பெற்றுள்ளது. இவ்விருது வருடாவருடம் ஹிந்தி மற்றும் ஏனைய பிராந்திய மொழிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

Zee5 OTT தளத்தில் வெளியாகியிருக்கும் ஆட்டோ சங்கர் வெப் சீரிஸினை Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். மலையாள நடிகர் சரத் ஆட்டோ சங்கர் வேடமேற்றிருந்தார். அர்ஜீன் சிதம்பரம், ஸ்வயம் சித்தா, ராஜேஷ் தேவ் மற்றும் பிரவீன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசையமைக்க, மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trip movieமிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ட்ரிப்’ திரைப்படம். கடந்த நவம்பர் மாதம் தலைக்கோணாவில் தொடங்கிய படப்பிடிப்பு, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.

இது குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்ட இயக்குநர் டெனிஸ், “முதல் கட்ட படப்பிடிப்பின்போது பலத்த மழை, வெள்ளப் பெருக்கு என்று பல கடுமையான சவால்களை எதிர்கொண்டோம். ஆயினும் எந்தவித சமரசமும் இல்லாமல், நாங்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்” என்றவர், படப்பிடிப்பிடிப்பு நடக்கையில் புலி ஒன்றை எதிர்கொண்ட மறக்க முடியாத அனுபவத்தையும் விவரித்தார்.
“படப்பிடிப்பு நடக்கும்போது நாங்கள் சற்றும் எதிர்பாராமல் திடீரென புலி ஒன்று வந்துவிட்டதைக் கண்டுஅதிர்ச்சியடைந்தோம். ஆயினும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. தடைகளின்றி படப்பிடிப்பை பாதுகாப்பாக நடத்த உதவிய உள்ளூர்வாசிகளுக்கும், வன இலாக்கா அதிகாரிகளுக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இவர்களது ஆதரவும், நடிக நடிகையரின் அர்பணிப்பு மிக்க ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க இயலாது. படப்பிடிப்பில் இத்தகைய சவால்கள் இருந்தாலும், யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவரது கலகலப்பான பேச்சும் செயல்களும், பணியின் சுமையைக் குறைத்து சுகமானதாக மாற்றியது. படத்தில் இவர்கள் வரும் பகுதி ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்படும் என நம்புகிறேன்.

பிரவீண் மிகச் சிறப்பாக நடித்திருப்பதுடன் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் துணிச்சலுடன் பணியாற்றியிருக்கிறார். ட்ரிப் திரைப்படம் சுனைனாவுக்கு நிச்சயமாக ஒரு திருப்பு முனையாக அமையும். படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் அவர் புன்னகை மாறாமல் அனைவருடனும் அளவளாவினார். அவரது அர்பணிப்பும் மிகச் சிறந்த நடிப்பும் பல புதிய படவாய்ப்புகளைப் பெற்றுத் தரும். வி.ஜெ.ராகேஷ், அதுல்யா சந்திரா, லட்சுமிப்ரியா, கல்லூரி வினோத், விஜே.சித்து, ஜெனிஃபர், மற்றும் ராஜேஷ் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்” என்றார்.

நவம்பர் இறுதியில் தலக்கோணா மற்றும் கொடைக்கானலில் முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படப்புகழ் சித்து குமார் இசையமைக்க, உதய சங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

BREAKING முதன்முறையாக ரஜினியுடன் இணையும் மெலோடி கிங்

BREAKING முதன்முறையாக ரஜினியுடன் இணையும் மெலோடி கிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Imman first time team up with Rajini in Thalaivar 168தர்பார் படத்தை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இது ரஜினியின் 168வது படம் என்பதால் தலைவர் 168 என்று தற்காலிக பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை சிவா இயக்குகிறார். இதன் சூட்டிங் அடுத்த டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது படத்தில் பணியாற்ற உள்ள கலைஞர்களை அறிவித்து வருகின்றனர்.

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பட இசையமைப்பாளர் இமான் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இமான் இசைப்பாளராக 100 படங்களை கடந்துவிட்டார். தற்போதுதான் முதன்முறையாக ரஜினி படத்திற்கு இசையைமக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் வெறும் குத்துப்பாட்டுக்களே வரும் நிலையில் நல்ல நல்ல மெலோடி பாடல்களை கொடுத்து வருகிறார் இமான். எனவே இவரை மெலோடி கிங் என்றும் இசை ப்ரியர்கள் அழைக்கின்றனர்.

Music Composer Imman first time team up with Rajini in Thalaivar 168

‘சங்கத்தமிழன்’ மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கும் நிவேதா

‘சங்கத்தமிழன்’ மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கும் நிவேதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Pethurajs confident on Sanga Thamizhan movieஅடியே அழகே… அழகே அடியே என்ற பாடலை யாராலும் மறுக்க முடியாது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த இந்த பாடல் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் இடம் பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.

இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதன் பின்னர் இவரது நடிப்பில் டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிரு புடிச்சவன் ஆகிய படங்கள் வெளியானது.

இதில் டிக் டிக் டிக் படத்தை தவிர மற்ற படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் முதன்முறையாக விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துள்ளார்.

இதில் சங்க மித்ரன் மற்றும் தமிழரசன் ஆகிய இரு வேடங்ளில் நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நிவேதாவும் ராஷி கண்ணாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூரி, நாசர், அனன்யா, மைம் கோபி, கல்லூரி வினோத், கயல் தேவராஜ், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். தெலுங்கில் விஜய்சேதுபதி என்ற பெயரில் ரிலீஸ் செய்கின்றனர்.

இந்த படம் நாளை மறுநாள் நவம்பர் 15ல் வெளியாகவுள்ளது. இந்த படம் தனக்கு திருப்புமுனையான அமைய வேண்டும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம் நிவேதா.

(சங்கத்)தமிழனை நம்பினோர் மோசம் போனதில்லை தானே…

Nivetha Pethurajs confident on Sanga Thamizhan movie

More Articles
Follows