தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ஏய் என ஒருமையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…
பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி என்றும், இதற்காக மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் அநாகரிக செயல் என்றும், இதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் ரஜினி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தவும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.