தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
என் இனிய தமிழ் மக்களே… இந்த வார்த்தையை யார் எங்கிருந்து கேட்டாலும் இந்த குரலுக்கு சொந்தக்காரர் பாரதிராஜா தான் என்று சொல்லுவார்.
தன்னுடைய அழகிய இயக்கத்தால் தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
தற்போது படங்களை இயக்காமல் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இவரது நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷுக்கு தாத்தாவாக நடித்திருந்தார் பாரதிராஜா. இருவருமே திருச்சிற்றம்பலம் என்ற கேரக்டர் பெயரில் நடித்திருந்தனர்.
FIRST ON NET திருச்சிற்றம்பலம் விமர்சனம் 4/5.; திருப்தியான பழம்
இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடையும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் ஓடும் தேனி மாவட்ட தியேட்டரில் ரசிகர்களை காண சென்றுள்ளார் பாரதிராஜா.
அதன் பின்னர் சென்னைக்கு செல்ல மதுரை விமான நிலையம் வந்துள்ளார் பாரதிராஜா.
அப்பொழுது அங்கு இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது மதுரையில் ஓய்வெடுத்து வருகிறார் பாரதிராஜா.
Bharathiraja waited for 2 hours in airport and fainted