ஜனவரி 8ஆம் தேதியே ‘பைரவா’வை கொண்டாட நீங்க ரெடியா?

ஜனவரி 8ஆம் தேதியே ‘பைரவா’வை கொண்டாட நீங்க ரெடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa teamவருகிற ஜனவரி 12ஆம் தேதி விஜய் நடித்த பைரவா படம் வெளியாகிறது.

இதை கொண்டாட தமிழகமெங்கும் உள்ள ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

ஆனால் அதற்கு முன்பே சென்னை ரசிகர்களுக்காக சென்னையில் உள்ள ராக்கி சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி 8ஆம் தேதி காலை 10 மணிக்கு பைரவா பட ட்ரைலரை திரையிட்டு கேக் வெட்டி இசையுடன் கொண்டாடவிருக்கிறார்களாம்.

 

 

raaki bairavaa

‘பைரவா’வின் எக்ஸ்ட்ரா போனஸ் பாட்டு இதுதான்

‘பைரவா’வின் எக்ஸ்ட்ரா போனஸ் பாட்டு இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa Vijayவிஜய் நடித்துள்ள பைரவா படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்த ஆல்பத்தில் வராத ஒரு பாடலை மட்டும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பதை குறிப்பிட்டு இருந்தோம்.

தற்போது அந்த பாடல் தொடங்கும் முதல் வரியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

காதல் குடில் என்று அப்பாடல் தொடங்கும் குடும்பம் மற்றும் கனவுகளைப் பற்றிய பாடல் எனவும் தெரிவித்துள்ளார்.

இது விவேக்கின் 25வது பாடல் ஆகும்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பரதன் இயக்கியுள்ளார்.

Vivek Lyricist@Lyricist_Vivek

#KaadhalKudil -the #BairavaaBonusSong is abt family n precious dreams. Its my 25th song wit SaNa sir #SaNaVivek25

தனுஷின் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலை அனிருத் பாட காரணமான ‘பெண்’

தனுஷின் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலை அனிருத் பாட காரணமான ‘பெண்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Anirudhஇன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார்? என்று கேட்டால் அனிருத்தின் பெயரை நிச்சயம் சொல்லலாம்.

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து பாடுவதிலும் இவர் வல்லவர்.

எத்தனையோ பாடல்களை இவர் பாடியிருந்தாலும், இவரின் இசையில் இவருக்கு பிடித்த பாடல் ‘எனக்கென்ன யாரும் இல்லையே..’ என்ற பாடல்தான்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் சென்னையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்களை சந்தித்தார்.

அப்போது அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது…

“என்னுடைய முன்னாள் கேர்ள் பிரண்டை ஒரு நாள் வேறொரு பையனுடன் சந்தித்தேன்.

உடனே வீடு சென்று, ‘ஊதுங்கடா சங்கு’ என்ற பாடலை கம்போஸ் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

இப்பாடல் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம் பெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Anirudh reveals why he sung the song ‘Oodhungada Sungu’ for Dhanush

கௌதம் மேனன் சொல்லப்போகும் அந்த 12வது மனிதர் யார்.?

கௌதம் மேனன் சொல்லப்போகும் அந்த 12வது மனிதர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautam menonதமிழ் சினிமாவில் கௌதம் மேனனுக்கு படங்களுக்கு எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

இவர் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் Breaking News and #My12thMan என்று குறிப்பிட்டுள்ளார்.

அது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளரா? அல்லது துருவ நட்சத்திரம் படம் பற்றிய தகவலா? என தெரியாமல் அனைவரும் குழம்பியுள்ளனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அதற்கான விடை அது தெரிந்துவிடும். காத்திருப்போம்.

Gautam menon going reveal his 12th Man

 

my 12

12th man

விஜய் ரசிகர்களுக்கு ‘பைரவா’ தரும் எக்ஸ்ட்ரா போனஸ்

விஜய் ரசிகர்களுக்கு ‘பைரவா’ தரும் எக்ஸ்ட்ரா போனஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayவிஜய் நடித்துள்ள பைரவா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

இப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதன் ஆடியோ லிஸ்ட்டில் இல்லாத மற்றொரு பாடலை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதுகுறித்து பாடல் ஆசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பாடல் மெலோடியாக இருக்கும் எனவும். பாடல் விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Cudnt Tnk U all individually owing 2 Innumerable msgs.It shows all ur luv 4 sir. Tnk u all  Wil post SongTitle n Details today

பழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Om Puriபழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.

இத்தகவலை பிரபல தயாரிப்பாளரும், அவரது நண்பருமான அசோக் பண்டிட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்…

ஓம் புரி மறைவுக்கு நடிகர் சமூகத்துக்கும் திரை மற்றும் நாடக துறைக்கும் மாபெரும் இழப்பாகும்.

அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிப்பதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்று நடிகர் சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம்புரி பற்றிய சில குறிப்புகள்…

1950-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி அரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்தார்.

புனே பிலிம் இன்ஸ்டிடி யூட்டில் படித்தார்.

இவருடன் இணைந்து படித்தவர்தான் நடிகர் நஸ்ருதீன்ஷா.

1982-ம் ஆண்டு சர்ரிச் சர்டு அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் ‘நகாரி’ என்ற கதாபாத்திரத்தில் ஓம்புரி நடித்தார்.

1982, 84-ம் ஆண்டுகளில் இருமுறை மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது, 1990ல் பத்மஸ்ரீ விருது ஏராளமான பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்.

பல ஆங்கிலப் படங்களிலும், பஞ்சாபி, உருது, மராத்தி, மலையாளம், கன்னட மொழிப்படங்களிலும் ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

1982இல் ஓம்புரி நடித்த “அர்த் சத்யா” இந்திப் படத்தைத்தான் இயக்குனர் பாலுமகேந்திரா 1993-ல் “மறுபடியும்“ என்ற பெயரில் தமிழில் படம் எடுத்தார்.

ஓம்புரி 1993-ம் ஆண்டு நந்திதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷான் என்ற ஒரு மகன் உள்ளார்.

2013ல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு ஓம்புரி தனியாக வசித்து வந்தார்.

Veteran actor Om Puri passes away

More Articles
Follows