தீபாவளி மோதலுக்கு தயாராகும் ‘பைரவா-சிங்கம் 3’

தீபாவளி மோதலுக்கு தயாராகும் ‘பைரவா-சிங்கம் 3’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3 movie and bairavaaவிஜய் நடித்து வரும் பைரவா படம் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது.

இப்படம் 2017 பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை தவிர இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இவ்வருட (2016) தீபாவளியன்று வெளியிடவிருக்கிறார்களாம்.

அதாவது அக்டோபர் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் டீசரையும் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கும் 12.00 மணிக்கு வெளியாக உள்ளதாம்.

விஜய்யுடன் இணையும் விஜய்சேதுபதியின் அக்கா

விஜய்யுடன் இணையும் விஜய்சேதுபதியின் அக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rekka sija roseபரதன் இயக்கும் விஜய்யின் பைரவா படத்தில் ஒரு நட்சத்திர பட்டளாமே நடித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், பாப்ரி கோஷ் உள்ளிட்ட 3 நாயகிகள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு கேரளா நாயகியான சிஜா ரோஸ் என்பவரும் இணைந்துள்ளார்.

இவர் றெக்க படத்தில் விஜய்சேதுபதியுடன் மாலா அக்கா என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் அழ இதான் உண்மையான காரணமா?

சிவகார்த்திகேயன் அழ இதான் உண்மையான காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan cry at remo meetரெமோ படத்தின் நன்றி விழா சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீல் மல்க உருக்கமாக பேசினார்.

இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…

சிவகார்த்திகேயன் அழுத காரணம் அறிய விசாரித்தேன்.

‘வேந்தர் பிலிம்ஸ்’ மதன் மற்றும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ மதன், இருவரும் சிவகார்த்திகேயனிடம் புதுப்படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து இருப்பதாக சொல்கின்றனர்.

ஆனால் சிவாவோ இருவரிடம் இருந்து அட்வான்ஸ் பணம் வாங்கவில்லை’ என்று மறுக்கிறார்.

ஆனால், ‘எஸ்கேப்’ ஆரிட்டிஸ்ட் மதனோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்கின்றார்.

இரண்டு பேரையும் நேரிடையாக அழைத்து வைத்து பேசினால்தான் உண்மை நிலை தெரியவரும்.

இந்த மன உளைச்சல் காரணமாக சிவகார்த்திகேயன் அழுது இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சிலரோ, சில நடிகர்கள்தான் காரணம் என்கின்றனர்.

ஆயிரம் பேர் பேசினாலும் சிவகார்த்திகேயனே சொன்னால்  மட்டுமே இதற்கான விடை கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களம் இறங்கிய சிம்பு

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களம் இறங்கிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu sivakarthikeyanரெமோ படத்தின் வெற்றி விழாவில் சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு அழுதார்.

பிரச்சினை செய்யாதீர்கள். என் வேலையில் குறுக்கீடாதீர்கள் என் கெஞ்சியும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு மனோபாலா தன் ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயன் பேச்சுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், சிம்புவும் ஆதவாக களம் இறங்கியுள்ளார்.

‘கவலைப்படாதே சிவா, அவர்கள் யார் என்று எனக்கும் தெரியும்.

அவர்கள் அதில்தான் சிறந்தவர்களாக இருகிறார்கள்.

உன் உழைப்புக்கு பலன் கிடைக்கும். மற்றதை கடவுளிடம் விடு’ என்று கூறியுள்ளார்.

Don’t worry shiva .Not only u ,even i know who they r and thats what they r good at .Hard work is all that matters . Leave the rest to god

‘அவ்வை சண்முகி’யில் சிவாஜி நடிக்க முடியாமல் போனது ஏன்?

‘அவ்வை சண்முகி’யில் சிவாஜி நடிக்க முடியாமல் போனது ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal sivaji ganesanசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தின் வெற்றி விழா சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட கே.எஸ்.ரவிக்குமார் பேசும் போது….

அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி கணேசன் வேடத்தில் சிவாஜி கணேசன்தான் நடிக்கவிருந்தார்.

அதற்காக எல்லாம் பேச்சுவார்தைகள் முடிந்துவிட்டது.

ஆனால் சூட்டிங் தொடங்கும் சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

எனவே அவர்தான் ஜெமினி நடித்தால் சரியாக இருக்கும் என்றார்.

ஜெமினிதான் ஆம்பளையும் பொம்பளையும் லவ் பண்னுவான் என்றார்.

தற்போது ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் கெட்டப்பை பார்த்தால், இவரையும் ஜெமினி லவ் செய்திருப்பார்” என்றார்.

‘பைரவா’வின் அடுத்த படம் அவுட்; விஜய் ரசிகர்கள் குஷி

‘பைரவா’வின் அடுத்த படம் அவுட்; விஜய் ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay keerthy sureshபரதன் இயக்கும் பைரவா படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கிய நாள் முதல் இப்படம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாய் இருக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியாவுடன் ட்ரெண்ட் ஆக்கி கொண்டாடினர்.

ஆனால் இதுவரை விஜய் படம் பட்டுமே வெளியானது.

தற்போது முதன்முறையாக விஜய், கீர்த்தி சுரேஷ் ஆடி பாடும் ஒரு போட்டோ அவுட் ஆகியுள்ளது.

எனவே இதை ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

More Articles
Follows