தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் அளவுக்கு உருவாகியுள்ள படம் பாகுபலி 2.
ராஜமௌலி இயக்கிய இப்படத்தின் முதல்பாக க்ளைமாக்ஸில் தாய் மாமன் கட்டப்பாவே பாகுபலியை கொல்வதாக காட்சியை வைத்திருந்தார் இயக்குனர்.
அன்றுமுதல் அவர் கொல்ல காரணம் என்ன? என விடைத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் பாகுபலி ரசிகர்கள்.
இந்நிலையில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
துபாய் உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 27ஆம் தேதியே ப்ரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க சென்சார் போர்டு உறுப்பினர் என்று தன்னை அடையாளம் காட்டிய உமர் சந்து என்ற நபர் பாகுபலி விமர்சனத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் படத்திற்கு 100க்கு 100 மதிப்பெண் வழங்கி, இதுவரை இதுபோன்ற இந்திய சினிமாவை பார்த்து இல்லை எனவும், ஹாலிவுட் படங்களை மிஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Exclusive First Detail Review of #Baahubali2 from UAE Censor Board ! All Time Blockbuster ! ☆☆☆☆☆ 5*/5* ! https://t.co/VsUWPXCZv8
— Umair Sandhu (@sandhumerry)
கிராபிக்ஸ் காட்சிகள், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மற்றும் ஹாரி பாட்டர் போன்ற ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு நிகராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகிய அனைவரின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் இருந்த்தாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்..? என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.