தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு படம் ஹிட்டானால் அதுவே டிரெண்டாகி தயாராகவுள்ள மற்ற படங்களும் அதே போல் உருவாகும்.
அதுபோன்ற டிரெண்ட்டை தற்போது பாகுபலி உருவாக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
சரித்திர கால கதையில் உருவான இது பெற்றி பெறவே, மகாபாரதம் கதை மோகன்லால் நடிப்பில் ரூ. 1000 கோடியில் உருவாகவுள்ளது என்பதை பார்த்தோம்.
மேலும் சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா படமும் மிகப்பிரம்மாண்டாக உருவாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது ராமாயண இதிகாசத்தை ரூ. 500 கோடியில் படமாக தயாரிக்க 3 தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என்று 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தை அல்லு அரவிந்த், மது மந்தீனா மற்றும் நமீத் மல்கோத்ரா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.
அதுவும் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தயாரித்து 3 பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இதில் அல்லு அர்ஜீன் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாம்.
ராஜமௌலியின் மகதீரா படத்தை தயாரித்தவர் அல்லு அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
Allu Arjun in the 500 crore project Ramayana which will have 3 Parts with 3 Producers