தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வரும் படங்களில் நடித்து வந்தார் அஜித்.
இதில் இதில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ‘வலிமை’ படம் உருவாகி வருகிறது.
இந்த இரு படங்களையும் வினோத் இயக்கினார்.
ஆனால் ‘வலிமை’ பட படப்பிடிப்புகள் முடியாமல் தள்ளி கொண்டே செல்கிறது.
இதனால் பர்ஸ்ட் லுக்கை கூட ரிலீஸ் செய்யவில்லை. தற்போது கொரோனா 2வது அலையும் இதற்கு காரணமாக அமைந்துவிட்டது.
இதனையடுத்து போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து படங்கள் செய்ய வேண்டாம். சின்ன இடைவெளி இருக்கட்டும் என நினைக்கிறாராம் தல அஜித்.
எனவே தன் அடுத்த பட கால்ஷீட்டை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என்பவருக்கு கொடுத்து விட்டாராம் தல.
‘வலிமை’ பட தமிழ்நாட்டு உரிமையை அன்புச்செழியன் தான் வாங்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
Ajith next film with this production house?