மீண்டும் பல்கேரியா பறந்தார் அஜித்

மீண்டும் பல்கேரியா பறந்தார் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith chennai airportதல 57 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி முடித்தனர் அஜித் படக்குழுவினர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை பல்கேரியா நாட்டில் நடத்தியிருந்தனர்.

தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா நாட்டிற்கு இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இதன் சூட்டிங் 60 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், தம்பி ராமையா, கருணாகரன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கமல்-அஜித்துக்கு பிறகு நடிகையை தேர்வு செய்த டைரக்டர்

கமல்-அஜித்துக்கு பிறகு நடிகையை தேர்வு செய்த டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

after kamal ajith Chakri Toleti direct heroine subjectஉலகநாயகன் கமல், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம் உன்னைப் போல் ஒருவன்.

இப்படத்தை சக்ரி டொலட்டி Chakri Toleti இயக்கியிருந்தார்.

இவரே அஜித்தின் பில்லா2 படத்தையும் இயக்கினார்.

தற்போது இவர் 3வதாக நேரடி தமிழ் படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இதில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்ன கூறப்படுகிறது.

விஜய்யின் துப்பாக்கி-2… ஜி.வி.பிரகாஷிடம் ஓகே சொன்ன ஏஆர் முருகதாஸ்

விஜய்யின் துப்பாக்கி-2… ஜி.வி.பிரகாஷிடம் ஓகே சொன்ன ஏஆர் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay murugadoss prakashஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் துப்பாக்கி.

விஜய்க்கு ஒரு ஸ்டைலீஷ் லுக்கை இப்படத்தில் முருகதாஸ் கொடுத்திருந்தார்.

இப்படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது.

எனவே முருகதாஸ் மற்றும் விஜய் ரசிகர்கள் இதை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அப்போது தீவிர விஜய் ரசிகரான ஜிவி. பிரகாஷும் வாழ்த்திவிட்டு துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முருகதாஸ்ம் சீக்கிரமே நடக்கும். ஓகே என்று தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி-ஜிவி.பிரகாஷ் பாணியில் நட்ராஜ்

விஜய்சேதுபதி-ஜிவி.பிரகாஷ் பாணியில் நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

natarajவருடத்திற்கு ஒரு படத்தை ஒரு ஹீரோ கொடுக்கவே திணறி வரும் நிலையில் வருடத்திற்கு அரை டஜன் படங்களை அசால்ட்டாக இரண்டு ஹீரோக்கள் கொடுத்து வருகிறார்கள்.

ஒருவர் விஜய்சேதுபதி. மற்றொருவர் ஜி.வி. பிரகாஷ்.

அண்மையில் விஜய்சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் றெக்க ஆகிய படங்களில் இரண்டு வார இடைவெளியில் வெளியானது.

அதுபோல் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் புரூஸ் லீ ஆகிய இருபடங்களும், இந்த நவம்பரில் வெளியாகவுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து, நட்ராஜின் நடிப்பில் உருவாகியுள்ள எங்கிட்ட மோதாதே படம் டிசம்பர் 2ல் ரிலீஸ்.

இதனையடுத்து டிசம்பரிலேயே போங்கு என்ற படமும் வெளியாகவுள்ளதாம்.

விநாயகர்-விஜயகாந்துடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயன்

விநாயகர்-விஜயகாந்துடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை தயாரித்த, 24 ஏஎம். ஸ்டூடியோஸ் நிறுவனமே அவரின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது.

மோகன் ராஜா இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்னேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க, ஓரிரு தினங்களுக்கு முன் இதன் சூட்டிங் தொடங்கியுள்ளது.

அடுத்த வருடம் 2017ல் ஆகஸ்ட் 25, அதாவது விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தை வெளியிட உள்ளனர்.

அன்றைய தினம் நடிகர் விஜயகாந்த்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர்

ஸ்ருதிஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruthi hassanதென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவரை ட்விட்டரில் ஏராளமானவர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருக்கு அடிக்கடி ட்விட்டரில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக போலீசில் புகார் செய்தார்.

இதனால் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அவர் பெங்களுரை சேர்ந்த டாக்டர் என்று கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

More Articles
Follows