தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டி ராமராவ் அவர்களின் நூறாண்டு விழா ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினிகாந்த் தெலுங்கில் பேசினார்.
அவர் பேசும்போது என்டி ராமராவ் & அவரது மகன் நடிகர் பாலையா ஆகியோரை வாழ்த்து பேசினார்.
அதன் பின்னர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிட்டு பேசும்போது.. “அவரின் தொலைநோக்கு பார்வையால் தான் இன்று ஹைதராபாத் ஹைடெக் சிட்டியாக மாறியுள்ளது என்றும் நியூயார்க் நகரம் போல வளர்ச்சி அடைந்துள்ளது” எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்த பேச்சுக்கு அமைச்சரும் நடிகையுமான ரோஜா கண்டனம் தெரிவித்து இருந்தார்.
“ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது பெரும் மரியாதை உள்ளது. ஆனால் அவருக்கு ஆந்திர அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை.” என்றார்.
மேலும் சந்திரபாபு நாயுடு தேர்தல் தோல்வி குறித்தும் கிண்டல் அடித்திருந்தார் ரோஜா.
ஒரு பக்கம் ரஜினிக்கு ஆதரவாகவும் மறுபக்கம் எதிர்ப்பும் ஆந்திராவில் கிளம்பியது. கடந்த ஓரிரு நாட்களாகவே ஆந்திர மக்கள் ரஜினி பக்கம் என்றும் ஆந்திரா மக்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆனது.
இந்த நிலையில் ரோஜாவின் கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்..
“புகழ்பெற்ற நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக இழிவான கருத்துக்களைத் தெரிவித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
நேர்மை, ஒழுக்கம், மனிதநேயத்தின் உருவமாக திகழ்பவர் ரஜினிகாந்த். நல்லுள்ளம் படைத்த அவர் நாடு கடந்து உலக அளவில் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார்.
அவர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வக்கிரமான ஒய்எஸ்ஆர் கும்பலின் இந்த திட்டமிட்ட தாக்குதல், அவர்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.
மேலும் ஆந்திரா மக்கள் ரஜினியுடன் என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Support and opposition to Rajini in AP Chandrababu Naidu condemns Roja speech