சினிமா & டிவி நிகழ்ச்சிக்கு முழுக்கு போடும் அமைச்சர் (நடிகை) ரோஜா.; ஏன்.?

சினிமா & டிவி நிகழ்ச்சிக்கு முழுக்கு போடும் அமைச்சர் (நடிகை) ரோஜா.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்த அமைச்சரவையும் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி, அமைச்சரவை மாற்றப்பட்டது. 25 அமைச்சர்களில், முன்னரே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 அமைச்சர்களும், புதியதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அப்படிப் புதிதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களில் நடிகை ரோஜாவும் இடம்பெற்றார்.

இந்த நிலையில் அமைச்சர் ரோஜா கூறியதாவது:

திரைப்படத்துறையில் இருந்து நான் அரசியலுக்கு வர ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் போன்றவர்கள் உத்வேகமாக இருந்தனர்.

முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது சந்திரபாபு நாயுடு வெற்றிக்காக ‘நக்சல்’கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் உயிரை பணயம் வைத்து பிரசாரம் மேற்கொண்டேன்.

ஆனால் அவரோ அதை கருத்தில் கொள்ளாமல் என்னை வெளியேற்றுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்.

சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை சந்திரபாபு நாயுடு வழங்கவில்லை.

பின், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கிய வாய்ப்பால் நகரி தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றேன்.

இப்போது அமைச்சராகும் வாய்ப்பை ஜெகன்மோகன் ரெட்டி வழங்கி உள்ளார்.

எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், வருமானத்திற்காக திரைப்படங்களில் நடித்ததுடன், ‘டிவி’ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன்.

இதையும் சிலர் விமர்சித்தனர். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி எதுவும் கேட்டதில்லை.

தற்போது அமைச்சராகி உள்ளதால் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன. எனவே, இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க மாட்டேன்.

இவ்வாறு ரோஜா கூறினார்.

Actress Roja to quit TV and Movie industry ?

கட்சிக்காரங்க வருமானத்தை சொல்றாரா.? உண்மை நிலவரத்தை பாருங்கய்யா…; முதல்வரை கலாய்த்த கஸ்தூரி

கட்சிக்காரங்க வருமானத்தை சொல்றாரா.? உண்மை நிலவரத்தை பாருங்கய்யா…; முதல்வரை கலாய்த்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சி குறித்து பேசியிருந்தார்.

அப்போது…

10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை, பத்து மாதங்களில் தலைநிமிர வைத்திருக்கிறோம்

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி

கேரளாவில் எனக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த மரியாதை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதனை கலாய்க்கும் வகையில் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை, 10 மாதங்களில் தலைநிமிர வைத்து உள்ளோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறிஉள்ளார்.

கட்சிக்காரங்க வருமானத்தை சொல்கிறார் போல. வெளியே வந்து உண்மை நிலவரத்தை பாருங்கய்யா… நல்லது நடக்கவில்லை என சொல்லவில்லை. ஆனால் செய்தது கைமண்ணளவு… நிறைவேற்ற வேண்டியது நிறைய இருக்கிறது. பாராட்டக் காத்திருக்கிறோம்.”

என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

Actress Kasthuri tweets against TN govt

‘மாநாடு’ புரொடியூசரின் அடுத்த பட அப்டேட்.; நிவின்பாலி அஞ்சலி கூட்டணி

‘மாநாடு’ புரொடியூசரின் அடுத்த பட அப்டேட்.; நிவின்பாலி அஞ்சலி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்.

‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி.

“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவர்கள் இருவரது கூட்டணியில் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்..

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.

சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் தத்ரூபமாக மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென ஒருநாள் விசிட் அடித்த இயக்குநர் மிஸ்கினே, இந்த செட்டை பார்த்து வியந்துபோய் உமேஷின் கலைநயத்தை பாராட்டி சென்றார்.

ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்றுள்ளது.

விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்பட் உள்ளன.

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி

இயக்கம் ; ராம்

இசை ; யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு ; ஏகாம்பரம்

கலை ; உமேஷ் ஜே குமார்

மக்கள் தொடர்பு ; A. ஜான்

Nivin Pauly – Anjali movie shoot wrapped up

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக அங்கீகாரம்

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அவரது இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

Parthiban’s Iravin Nizhal gets new recognition

5 மொழிகளில் உருவான ‘டூ ஓவர்’ டைட்டில் போஸ்டரை வெளியிட்ட ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த்

5 மொழிகளில் உருவான ‘டூ ஓவர்’ டைட்டில் போஸ்டரை வெளியிட்ட ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷார்வி இயக்கத்தில், மானவ், மரியா பின்டோ நடித்த திரைப்படம், ஐந்து மொழிகளில் தயாராகிறது.

நடிகர் பிரசாந்த் ‘டூ ஓவர்’ படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டரை வெளியிட்டார்.

ரியல் இமேஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், எஸ் சரவணன் “டூ ஓவர்” திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஷார்வி எழுதி இயக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பான திரைப்படம் டூ ஓவர். படித்தவர் ஆனால் வேலையில்லாதவர் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை.

ஒரு மனிதனின் வேலையுடனான உறவை அடிப்படையாகக் கொண்டது. மரியா பின்டோ, நெஃபி அமெலியா மற்றும் பலர் நடிகர்களின் ஒரு பகுதியாக உள்ளனர்.

குமாரசாமி பிரபாகரன் இசையமைக்க, பிஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பு கே.வி.செந்தில் இணை இயக்கம் ஏ.பி.சிவா. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் படமாக உருவாகிறது ‘டூ ஓவர்’!

Prashanth released Do Over movie first look poster

தமிழே இணைப்பு மொழி – ஏஆர் ரஹ்மான்.; தமிழால் இணைவோம் – சிம்பு & அனிருத்

தமிழே இணைப்பு மொழி – ஏஆர் ரஹ்மான்.; தமிழால் இணைவோம் – சிம்பு & அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு ‛‛இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு, ‛ழ’ கரத்துடன் போட்டோவை பதிவிட்டு, தமிழணங்கு என பதிவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா, ‛‛ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்கனும்” எனத் தெரிவித்தார்.

ஒரு மொழியை கற்பது தவறல்ல. ஆனால் மொழி திணிப்பதை ஏற்க மாட்டோம் என பலர் கருத்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் நடந்த CII – சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய ரஹ்மான், ‛‛தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமைப்பட வேண்டும்.

ஒரே இந்தியா தான். வட இந்தியா, தென் இந்தியா என்றில்லை” என்றார்.

மேலும் ‛‛இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியது பற்றிய கேள்விக்கு… ‛தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று சொன்னவர் ரஹ்மான்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 12ல் நடிகர் சிம்பு & இசையமைப்பாளர் அனிருத் இருவரும் தமிழால் இணைவோம் #TamilConnects எனப் பதிவிட்டுள்ளனர்.

STR and Anirudh take strong political stand following AR Rahman

More Articles
Follows