அஜித் படத்தை இயக்கியவர் மரணம்; அழுகிய நிலையில் உடல் கிடந்தது.

அஜித் படத்தை இயக்கியவர் மரணம்; அழுகிய நிலையில் உடல் கிடந்தது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director siva kumarஅர்ஜூன் ரோஜா நடித்த ஆயுத பூஜை மற்றும் அஜித், மந்த்ரா நடித்த ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களை இயக்கியவர் சிவகுமார்.

இவர் இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா அபார்ட்மென்ட் ஒன்றில் இவர் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அரவது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இவர் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. கொலையா,? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்2; கமல் மீது வக்கீல் புகார்

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்2; கமல் மீது வக்கீல் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி வெற்றி பெற, அதன் இரண்டாம் பாகத்தையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சி மீது போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இநத் வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சர்வாதிகாரி டாஸ்க் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பது போன்று உள்ளது என்று கூறி சென்னையை சேர்ந்த வக்கில் லூயிசாள் ரமேஷ் என்பவர், கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் லூயிசாள் ரமேஷ் கூறியிருப்பதாவது…

விஜய் டிவியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கமல் தனது மக்கள் நீதி மையத்தின் கட்சியை வளர்க்க எடுத்துள்ள யுக்தி தான் இந்த நிகழ்ச்சி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

இவருடைய ஏற்பாட்டின் படி இந்தவாரம் சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, சர்வாதிகாரியாக நடிக்கிறார்.

இவர் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களை கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்த தொடரை நடத்தும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனமும், கமலும் கூறுகின்றனர்.

அதைத்தான் இவர்கள் நடித்து காட்டுகின்றனர்.

ஜூலை 31 அன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரித்விகா என்ற போட்டியாளர், “இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவிற்கு தெரியாது, தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது” என கூறுகிறார்.

இந்த டாஸ்க் முடிந்தவுடன் கமலும், சனிக்கிழமை அன்று, தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.

தமிழகத்தை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக, சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்வதோடு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் பிலிம் சிட்டியில் விஸ்வாசத்தை தொடங்கும் அஜித்

மீண்டும் பிலிம் சிட்டியில் விஸ்வாசத்தை தொடங்கும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasam ajithவிவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரித்து வருகிறது. இதையும் சிவா இயக்கி வருகிறார்.

இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க, நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

அவருடன் தம்பி ராமையா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தன் இசைப் பயணத்தில் செஞ்சுரி அடித்த இமான் இப்படம் மூலம் அஜித் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கிறது.

அதன்பின்னர் ராஜமுந்திரியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது மீண்டும் சில காட்சிகளுக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார்களாம்.

ஜெயலலிதா-விஜய் இடையே பிரச்சினை உருவாக காரணம் இதுதானா..?

ஜெயலலிதா-விஜய் இடையே பிரச்சினை உருவாக காரணம் இதுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and jayalalithaஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் முக்கிய கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் ராதாரவி.

இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார் ராதாரவி.

அதில்.. ‘‘ஜெயலலிதா இருந்தபோதே தைரியமாக பல வி‌ஷயங்களை செய்தவர் விஜய். அதனால்தான் இருவருக்கும் பிரச்சினை உருவானது.

அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். இது 6 வருடங்களில் நடக்க வாய்ப்புள்ளது.” என ராதாரவி கூறியுள்ளார்.

இன்சூரன்ஸ் பண மோசடியை சொல்ல வரும் *படித்தவுடன் கிழித்துவிடவும்*

இன்சூரன்ஸ் பண மோசடியை சொல்ல வரும் *படித்தவுடன் கிழித்துவிடவும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Padithavudan Kizhithuvidavum shooting spotநடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும்.

அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது.

இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் R.உஷா.

கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

வில்லனாக S.M.T.கருணாநிதி அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செ.ஹரிஉத்ரா (இவர் ஏற்கனவே மீத்தேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்க படுகின்றன என்பதை மையமாக வைத்து “ தெரு நாய்கள் “ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது )

படம் பற்றி இயக்குனர் ஹரிஉத்ரா பகிர்ந்து கொண்டது…

இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ் அதுதான்.
அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த “படித்தவுடன் கிழித்துவிடவும் “ இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை.

இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம்.

பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம்.

90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம்.

அதற்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் ஹீலியம் என்ற புதுவகையான கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது.

படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.

ஒளிப்பதிவு – வாசு
இசை – நிரோ பிரபாகரன்
பாடல்கள் – மாஷா சகோதரிகள் மற்றும் அபிநந்தன்
கலை – இன்ப ஆர்ட் பிரகாஷ்
சண்டை – ஸ்டன்ட் கோட்டி
எடிட்டிங் – முத்துமுனியசாமி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இணைத் தயாரிப்பு – சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர்
தயாரிப்பு – R.உஷா

Padithavudan Kizhithuvidavum movie deals with Insurance amount and its politics

Padithavudan Kizhithuvidavum movie deals with Insurance amount and its politics

தமிழை அடுத்து தெலுங்கு கன்னடத்திலும் நுழையும் நந்திதா

தமிழை அடுத்து தெலுங்கு கன்னடத்திலும் நுழையும் நந்திதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nandita swethaமுன்னணி இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி ராசியான நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை நந்திதா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா ’ என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கிலும் ‘வெற்றிகரமான நடிகை ’ என்று பெயர் பெற்றார். இவர் அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

இது குறித்து நந்திதா பேசுகையில்,‘ தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சீனிவாசா கல்யாணம் ’ என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமீய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். குடும்ப பாங்கான படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில்ராஜுவின் இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் பல வீர தீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். தற்போது இந்த படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறேன்.

இதற்கு முன் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான டார்லிங் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிரேம கதாசித்திரம் 2 படத்திலும் நடித்து வருகிறேன். இதற்கான படபிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.

தமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும், ‘நர்மதா ’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாகவிருக்கிறேன்.’ என்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக நடித்து வரும் நந்திதாவை அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

More Articles
Follows