தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் ‘அத்ரங்கி ரே’ என்ற பெயரில் உருவான படத்தை ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டனர். கடந்த வெள்ளியன்று இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.
தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் சார் என்ற படத்தில் நடிக்கிறார்.
தமிழில இந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிறார்.
இந்த படங்களை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதை தனுஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனுஷின் ட்விட்டர் பதிவில்,” ஆம்,யூகங்கள் உண்மைதான் அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர் நான்தான். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்டன் செல்வராகவன் முதன்முறையாக நாயகனாக நடித்து வரும் ‘சாணிக்காயிதம்’ படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
மேலும் கடந்த வாரத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் வெளியான ‘ராக்கி’ படத்தையும் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
திரையரங்குகளில் வெளியான ராக்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Rocky director joins next with Dhanush