சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவானார் சூரி.; ஹீரோயின் யார்.?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவானார் சூரி.; ஹீரோயின் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கூழாங்கல்’ எனும் மாபெரும் வெற்றிக்குப் படத்தை இயக்கியவர் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்.

பி.எஸ்.வினோத்ராஜ் தற்போது தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

அன்னா பென்

சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் SK புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைப் பகிர்ந்துகொண்ட சிவகார்த்திகேயன், “எங்கள் SK புரொடக்‌ஷனின் அடுத்த படத்தை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் எனது அன்பான சூரி அண்ணன் & ஒரு திறமையான நடிகை அன்னா பென் இணையும் படத்தின் தலைப்பை கொட்டுக்காளி”என கூறியுள்ளார்.

கொட்டுக்காளி

sivakarthikeyan producered next movie poster and title released

ஜெயம் ரவி படம் இயக்குவது எப்போது.? அகிலனின் அசத்தலான பதில்

ஜெயம் ரவி படம் இயக்குவது எப்போது.? அகிலனின் அசத்தலான பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூலோகம் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கல்யாண இணைந்துள்ள படம் ‘அகிலன்’.

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் நாயகிகளாக பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘அகிலன்’ திரைப்படம் நாளை மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுடன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் உரையாடினார் ஜெயம் ரவி.

அப்போது ஒரு ரசிகர்.. “உங்களுக்கு படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா.? அது எப்போது நிறைவேறும் என கேட்டுள்ளார்?

எனக்கு 50 வயது ஆவதற்குள் நான் படம் இயக்குவேன்” என தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

i will film directing idea for jayam ravi

‘வடசென்னை’ மிஸ் ஆச்சு.. ‘விடுதலை’ கிடைச்சிடுச்சி.. – விஜய்சேதுபதி

‘வடசென்னை’ மிஸ் ஆச்சு.. ‘விடுதலை’ கிடைச்சிடுச்சி.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது..

” இப்போது சூரி பேசியது எப்படி உங்களை ஆட்கொண்டுள்ளதோ அதுபோலவே படம் முழுக்க அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களை ஆட்கொள்ளும். வெற்றிமாறனின் ‘வடசென்னை’யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன்.

விடுதலை

அதனால் ‘விடுதலை’ படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை. எட்டு நாள் தான் கால்ஷீட் என சொல்லி வெற்றிமாறன் என அழைத்து சென்றார். ஆனால் போன பின்பு தான் தெரிந்தது அது எனக்கான ஆடிஷன் என்று. வெற்றி சாருடன் வேலை பார்த்தது மிகவும் அறிவு சார்ந்தது.. முக்கியமானதாக பார்க்கிறேன்.

இளையராஜா இசையை போலவே அவருடைய பேச்சும் மிகவும் ஆழமானது அதை கூர்ந்து கவனியுங்கள். நன்றி”.

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

விடுதலை

I missed Vadachennai movie but got Viduthalai says Vijay Sethupathi

இளையராஜா இசையில் உருவமாக… எனக்குள் இருக்கும் வேறொரு நடிகன்..; பூரிப்பில் சூரி

இளையராஜா இசையில் உருவமாக… எனக்குள் இருக்கும் வேறொரு நடிகன்..; பூரிப்பில் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியதாவது…

“எத்தனையோ முறை காமெடியனாக மேடை ஏறி உள்ளேன். ஆனால் முதல் முறையாக கதை நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளையராஜாவை இசை கடவுள் என்றே சொல்வேன். அவரது இசையில் பாடலில் நான் ஒரு உருவமாக இருப்பது மகிழ்ச்சி.

சூரி

கதாநாயகர்களுக்கு இணையாக அதிக அளவு ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவர் படத்தில் நான்கு காட்சிகளாவது நடிக்க மாட்டோமா என்று பல சமயங்களில் ஏங்கி இருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து பேசிய பொழுது இந்த கதை குறித்து சொன்னார்.

ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி சொல்லி வரும் பொழுது எல்லாவற்றிற்கும் நடிகர்களை கமிட் செய்து விட்டார். அப்போது லீட் ரோல் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தான் அதை செய்கிறீர்கள் என்று சொன்னார்.

நான் சந்தோஷத்தில் எழுந்த போது அந்த வானத்தில் முட்டி இருப்பேன்.

பிறகு ‘வடசென்னை’, ‘அசுரன்’ படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு வாய்ப்பு வருமா என்று எதிர்பார்த்து இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகாமல் வெற்றிமாறன் அழைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்குள் இருக்கும் வேறொரு நடிகனை தட்டி எழுப்பினார். அவருக்கு நன்றி”.

விடுதலை

Soori talks about his experience with ilaiyaraja and Vetrimaran

வசதியாய் பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ சிரமம்.. நன்றியோடு மன்னிப்பு கேட்கிறேன்.. – வெற்றிமாறன்

வசதியாய் பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ சிரமம்.. நன்றியோடு மன்னிப்பு கேட்கிறேன்.. – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

“இந்தப் படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும் சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி அனைவரும் மிக கடினமான உழைப்பை கொடுத்துள்ளனர்.

இந்த கதையை கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. எந்த ஏரியாவில் கேட்டாலும் அவரிடம் ஏற்கனவே ஒரு கதை இருக்கும். அந்த அளவுக்கு எழுதி குவித்து இருக்கிறார். ராஜா சாரிடம் வேலை பார்த்தது முன்பே சொன்னது போல மிகப்பெரிய அனுபவம்.

நான் அடிக்கடி கோபப்படுவேன். கோபம் என்பது என்னுடைய இயலாமை தான். அந்த நேரத்தில் அந்த கோபம் எல்லாம் என்னுடைய உதவி இயக்குநர்கள் மேல்தான் திரும்பும்.

இந்த சமயத்தில் அவர்களுக்கு நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்துக்கு முதலில் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் தான் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் பற்றி சொன்னேன்.

வெற்றிமாறன்

ஆனால், அதையும் தாண்டி மூன்று மடங்கு வரை போய்விட்டது. அதை எல்லாம் கேட்காது இந்த படத்தின் மீது அவர் ஒரு பார்வையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அது முக்கியமானது.

சூரியை வைத்து ஒரு எளிய படம் எடுத்துக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு இன்னும் படம் பெரிதானது. சேதுவை வைத்து கிட்டத்தட்ட 65 நாட்கள் படம் பிடித்தோம். முதல் பாகத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரைப் பற்றி தான் பேசி இருப்போம். இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருகிறார்.

சில அரசியல் சிந்தனைகளை எல்லாம் படமாக்குவதற்கு விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பது மிகவும் நம்பிக்கை கொடுத்தது. 25 பக்க காட்சிகளை எல்லாம் இரண்டு மணி நேரத்தில் எடுத்து இருக்கிறோம்.

வசதியாக இருந்து பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ போன்ற படத்தில் நடிப்பது மிகவும் சிரமமானது. கௌதம் மேனன் நடிக்க உள்ளே வந்ததை விட ராஜீவ் நடிக்க ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவரும் எளிதாக இந்த கதையில் ஒன்றிப் போனார்.

இந்த கதை என்னுடைய விருப்பம் தான். அதற்கு ஒத்துழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய உழைப்பையும் வெற்றியையும் என்னுடைய குரு பாலு மகேந்திராவுக்கும் என்னுடைய அசிஸ்டன்ட்ஸ்க்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

விடுதலை

Viduthalai movie is tough for few actors says Vetrimaaran

என் மன உணர்வை உள்வாங்கி பாடலாக்கி அதே உணர்வை இளையராஜா கொடுத்தார் – வெற்றிமாறன்

என் மன உணர்வை உள்வாங்கி பாடலாக்கி அதே உணர்வை இளையராஜா கொடுத்தார் – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

“‘விடுதலை’ படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் வழி நெடுக காட்டுமல்லி பாடல்.

இந்த பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்தப் பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையும் கேட்டேன்.

என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடல் ஆக்கி ஒலியாக அதை எனக்கு கொடுத்த போது மீண்டும் அந்த உணர்வு எனக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு மிகப்பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தான் அதை சந்தோஷத்தோடு உங்களை இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்” என்றார்.

விடுதலை

We grown up with ilaiyaraja music says Vetrimaran

More Articles
Follows