தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட்டில் ‘லியோ’ படத்தின் வசூல் பற்றி பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வசூல் விவரங்களை தயாரிப்பாளர் அறிவித்தாலும் 4 நாட்களில் 400 கோடி எப்படி வசூல்? ஆகும் என சினிமா வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இமானுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்ற பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் இமானுக்கு நெருங்கிய நண்பர் அவர் நல்லது செய்யதான் வந்தார் என இமானின் முதல் மனைவி மோனிகா சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் – இமான் மோதல் குறித்து நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளதாவது… இமானின் முதல் மனைவி மோனிகா சொன்னது அனைத்தும் பொய்.. ஏற்கனவே பெண் பார்த்துவிட்டு தன்னை விவாகரத்து செய்தார் இமான் எனக் கூறியிருந்தார். அப்படியெல்லாம் இல்லை.
இப்போது வரை மோனிகாவுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் செலவை இமான் கவனித்து வருகிறார். மேலும் மாதா மாதம் சரியாக ஜீவனாம்சம் கொடுத்து வருகிறார்.
விவகாரத்திற்கு பின் தான் அந்த அமீலியா என்ற பெண்ணை நாங்கள் இமானுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். பின்பு அவர்கள் இருவரும் பழகிய பின்னர் திருமணம் செய்து கொண்டனர்” என குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
Actress Kutty Padmini reveals about Sivakarthikeyan and Imman issue