தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஒரு வருடமாக பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்..? என்ற கேள்விக்கு விடைத் தெரியாமல் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதற்கான விடை கடந்த கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கிடைத்தது.
இப்படத்தில் பாகுபலி கேரக்டருக்கு கிடைத்த அளவு வரவேற்பு கட்டப்பாவுக்கும் கிடைத்தது.
இந்நிலையில் கட்டப்பா குறித்து நடிகை குஷ்பூ கூறியதாவது…
“கட்டப்பா கேரக்டரில் சத்யராஜை தவிர மற்றொரு நடித்திருந்தால் இந்தளவு ஹிட் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி கேரக்டராகவே மாறிவிடுவார் சத்யராஜ்.
‘பெரியார்’ படத்தில் நடித்தற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என நினைத்தேன்.
ஆனால் அப்போது கிடைக்காத விருது, இம்முறை கட்டப்பா கேரக்டருக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.
மேலும் அவரைப் பற்றி ஒரு ரகசியத்தை இப்போது சொல்கிறேன். சத்யராஜூக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்த ஒரே நாயகி நான்தான்’ என்று தெரிவித்துள்ளார்.
ரிக்சா மாமா’, ‘பெரியார்’, ‘மலபார் போலீஸ்’, ‘நடிகன், ‘புரட்சிக்காரன்’, வீரநடை’, ‘உன்னை கண் தேடுதே’, ‘பிரம்மா’, ‘கல்யாண கலாட்டா’, ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.