ஒரே ஷாட்டில் விமலின் ஹாரர் படம்.; வீராவுக்கு சிங்காரவடிவேலன் நன்றிக்கடன்!

ஒரே ஷாட்டில் விமலின் ஹாரர் படம்.; வீராவுக்கு சிங்காரவடிவேலன் நன்றிக்கடன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Singara Vadivelanகழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்..

மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

“1 பந்து 4 ரன் 1 விக்கெட்” பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார்..

இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குனர் வீரா.

இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக, நன்றிக்கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் சிங்காரவடிவேலன்.

வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.

Actor Vimal’s next film is produced by Singara Vadivelan

கூகுள் தேடலில் ட்விட்டர் ட்ரெண்டிங்..; ‘சூரரைப் போற்று’ பட அசாத்திய சாதனை

கூகுள் தேடலில் ட்விட்டர் ட்ரெண்டிங்..; ‘சூரரைப் போற்று’ பட அசாத்திய சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottruஒரு படம் மக்களை எந்தளவுக்குச் சென்று அடைந்துள்ளது என்பதைப் பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம்.

மக்களிடையே அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம், நடிகரின் நடிப்பு ஏற்படுத்திய பிரமிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சமூக வலைதளத்தில் எதிரொலிக்கும். மேலும், பலரும் ஒரு படத்தைப் பற்றிப் பேசும் போது “அப்படி என்ன இந்தப் படத்தில் இருக்கும்” என்கிற ஆர்வத்தைப் பார்க்கத் தூண்டும்.

இப்படி அனைத்து வழிகளிலும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சுதா கொங்கரா துல்லியமான இயக்கத்தில், சூர்யாவின் பிரமிப்பூட்டும் நடிப்பில், ஜி.வி.பிரகாஷின் சிலிர்ப்பூட்டும் இசையில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’.

2டி நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்திருந்தது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 12-ம் தேதி வெளியானது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்த இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன் பணிபுரிந்திருந்தார்.

மேலும், 2டி நிறுவனமும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது.

இந்தப் படம் வெளியான முதலே, திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவருடைய பாராட்டு மழையிலும் நனைந்தது. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி, இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலருமே படத்தைப் பார்த்துப் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

பலரும் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்யவே, #SooraraiPottru என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அளவில் அதிகப்படியாக ட்வீட் செய்யப்பட்ட படங்களின் ஹேஷ்டேக்குகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த மகுடமாக அமைந்துள்ளது கூகுள் தேடல். 2020-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை அறிவித்துள்ளார்கள்.

அதிலும் 2-ம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது ‘சூரரைப் போற்று’. இந்த தேடல் பட்டியலில் முதல் 10 இடங்களில்
இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்தியப் படத்தின் பெயர் ‘சூரரைப் போற்று’ மட்டுமே.

மக்கள் மத்தியில் தங்களுடைய கடும் உழைப்பு எந்தளவுக்குப் போய் சென்றுள்ளது என்பதை இந்த 2 சாதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

Suriya’s Soorarai Pottru adds two more feathers to its cap!

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன்…; ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் அப்டேட்ஸ்

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன்…; ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பெரிய எதிர்பார்ப்பு சமீபத்தில் ஒரு படத்துக்கு உருவாகியுள்ளது என்றால் அது ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கிற்குத் தான்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’.

2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார்.

இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் இழைத்து தயாராகி வருகிறார்.

தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘அந்தாதூன்’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது.

தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கண்டிப்பாக இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

அந்தாதூன்’ ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறித்து சிம்ரன் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ‘அந்தாதூன்’.

பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அர்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதர கதாபாத்திரங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காமெடி, த்ரில்லர் என அனைத்தும் கலந்த வித்தியாசமான படமான ‘அந்தாதூன்’ தமிழிலும் மாபெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.

Actress Simran is on board for Andhadhun Tamil remake

Andhadhun Tamil

ஜீவன் ரித்திகா யாஷிகா இணையும் ‘பாம்பாட்டம்’..; 5 மொழிகளில் உருவாக்கம்

ஜீவன் ரித்திகா யாஷிகா இணையும் ‘பாம்பாட்டம்’..; 5 மொழிகளில் உருவாக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pambattamஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாம்பாட்டம் “.

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள் இவர்களுடன் இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ்

இசை – அம்ரிஷ்

பாடல்கள் – பா.விஜய், யுகபாரதி, விவேகா

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை – C.பழனிவேல்

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்

நடனம் – தினேஷ், சிவசங்கர்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

இணை தயாரிப்பு – பண்ணை A இளங்கோவன்

தயாரிப்பு – V.பழனிவேல்

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான்

படம் பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் பகிர்ந்த தகவல்…

1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கி உள்ளேன்.

மிகப்பெரிய C.G நிறுவனம் ஒன்று இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிக பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.

மிகப்பெரிய பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளோம்.

படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் மொத்தம் 120 நாட்கள் நடைபெற இருக்கிறது..

Pambattam will be made in 5 languages

நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் ஒளிபரப்பப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே சித்ரா.

இவர் நேற்று அதிகாலை திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இது தற்கொலை தான் என போலீசார் கூறினாலும் இது கொலையா தற்கொலையா என்னும் விவாதம் நெட்டிசன்கள் மத்தியில் நடந்து வருகிறது.

விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

எங்களால் இனி யாரையும் முல்லை கேரக்டரில் பார்க்கவே முடியாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த சீரியலில் அவருடைய நெருங்கிய தோழியான சரண்யா துராடி என்பவர் நடிக்கப்போகிறார் என கூறப்படுகின்றது.

மரணத்திற்கு முன்பு கடைசியாக சித்ரா அவர்கள் சரண்யா உடன் தான் வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

saranya turadi

Saranya Turadi to play mullai character in pandian stores

கன்னத்தில் இருந்த நகக்கீறல் சித்ராவுடையது தான்..; அவரது மரணம் தற்கொலை தான்..; போலீசார் தகவல்

கன்னத்தில் இருந்த நகக்கீறல் சித்ராவுடையது தான்..; அவரது மரணம் தற்கொலை தான்..; போலீசார் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chitra suicide‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை புகழ் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது கணவர் ஹேமந்த் உடனிருந்துள்ளார்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது அம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

சித்ராவின் உடலை 2 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

இந்த பிரேத பரிசோதனையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என உறுதியாகியுள்ளது.

அவரது கன்னத்தில் இருந்த நகக்கீரல் சித்ராவின் நகக்கீறல் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம்? என போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Police confirms Chitra’s cause of death

More Articles
Follows