ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘கழுகு-2’..!

ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘கழுகு-2’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் ‘கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர்ச்சிவசப்பட்ட கோவை விநியோகஸ்தர் சிதம்பரம், கோவை ஏரியா வெளியீட்டு உரிமையை அவுட் ரேட் முறையில் வாங்கியுள்ளார்..

கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

சந்தானத்தின் அக்யூஸ்ட் ஒன் படத்திற்கு பிராமணர்கள் எதிர்ப்பு

சந்தானத்தின் அக்யூஸ்ட் ஒன் படத்திற்கு பிராமணர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)ஜான்சன் இயக்கத்தில் சந்தானம், தாரா இணைந்துள்ள படம் ஏ1 (அக்யூஸ்ட் ஒன்).

இப்பட டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பிராமணர்களை குறிப்பாக பிராமண பெண்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இது பிராமண குல மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நெல்லையிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் “சந்தானம் நடித்துள்ள ஏ1 படம், பிராமண பெண்களை கேலியாகவும், அவதூறாகவும் சித்தரிக்கிறது. பிராமண பெண்ணை மற்ற சமுதாயத்தினர் இழிவுப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதனால் எங்கள் மனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தில் நடித்த சந்தானம், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என கூறப்பட்டுள்ளது.

ராஜராஜன் பற்றி பேச்சு.; போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போடும் ரஞ்சித்

ராஜராஜன் பற்றி பேச்சு.; போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போடும் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித்.

இவர் சில மாதங்களுக்கு முன்னர் ராஜராஜன் சோழன் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

எனவே இதனையடுத்து திருப்பனந்தாள் போலீசார், கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, பா.ரஞ்சித் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பா.ரஞ்சித் 15 நாட்களுக்குள் கும்பகோணம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இருப்பவர் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜரானார்.

பா.ரஞ்சித் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி கும்பகோணம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான பேத்திகள்.; ரஜினியை கலாய்க்கும் கோமாளி

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான பேத்திகள்.; ரஜினியை கலாய்க்கும் கோமாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)நவராத்திரி படத்தில் சிவாஜிகணேசன் ஒன்பது வேடங்களில் நடித்தார்.

அவரை மிஞ்சும் வகையில் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்தார்.

விரைவில் வெளியாகவுள்ள கோமாளி படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார் ஜெயம்ரவி.

பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம்ரவி, காஜல்அகர்வால், யோகிபாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக இப்படம் பேச உள்ளது.

இந்த நிலையில் இன்று ஒலியிம் ஒளியும் என்ற பாடல் வெளியானது.

அந்த பாடலில் 1990களில் நடந்த சில நிகழ்வுகளை பாடல் வரிகளாக வைத்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி நடித்தவர்கள் இன்று பாட்டியாகிவிட்டார்கள். பேத்தியாக நடித்தவர்கள் இன்று அவருடன் ஜோடி போடுகின்றனர் என்ற வரிகளில் ரஜினியை கலாய்த்துள்ளனர்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் விஜய்சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)இந்தியாவில் சினிமாவில் போல கிரிக்கெட்டும் மிக பிரபலம். எனவே தான் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் நன்றாக ஓடி வரவேற்பை பெற்றது.

தற்போது இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை, மிக விரைவில் சினிமாப் படமாக்க உள்ளனர்.

முத்தையா முரளீதரனையே, அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தனர்.

தற்போது முத்தையா முரளீதரன் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க உள்ளனர்.

இப்படத்திற்கு 800 என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

சல சல எனும் துள்ளல் பாடலை பதிவு செய்த மித்ரன் படக்குழு

சல சல எனும் துள்ளல் பாடலை பதிவு செய்த மித்ரன் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)மிக உற்சாகமான எனர்ஜி மற்றும் மரபணு ரீதியாக வலிமையான பண்புகளை கொண்ட சண்முக பாண்டியன், குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியிருக்கிறார். கிராமப்புற பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘மித்ரன்’ படத்திற்காக தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு ‘சல சல’ என்ற துள்ளலான ஒரு பாடலை படமாக்கியிருக்கிறது. அது உருவாகியிருக்கும் விதம் அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது.

இது குறித்து படத்தின் இயக்குனர் ஜி.பூபாலன் கூறும்போது, “ஆம், பாடலின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகவும் நேசித்தோம். ஏனெனில் அது மிகவும் வேடிக்கையாக இருந்தது, மேலும் மொத்த படப்பிடிப்பு தளமும் மிகவும் எனர்ஜியுடன் இருந்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

பொதுவாக, போலீஸ் கதைகள் தீவிரத்தன்மையுடனும், தீவிரமான மோதல்கள் கொண்ட பின்னணியையும் கொண்டிருக்கும். துள்ளலான கொண்டாட்ட பாடல் எப்படி வைக்க முடியும் என்ற கேள்விக்கு, இயக்குனர் ஜி பூபாலன் கூறும்போது, “ஆரம்பத்தில் இருந்தே, இது ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு படம் என்று குறிப்பிடுகிறோம். படம் ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனை பற்றியது, அவர் ஒரு போலீஸ்காரராகி தனது பக்கத்துக்கு ஊருக்கு வந்து கடமையில் சேருகிறார். எனவே நாங்கள் காதல், ஆக்‌ஷன், டிராமா, நகைச்சுவை மற்றும் குறிப்பாக தாய் – மகன் உணர்வுகளுடன் படத்தை ஒன்றிணைத்துள்ளோம். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்னணியில் உள்ள பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சல சல பாடலை பற்றி அவர் கூறும்போது, “அருண் ராஜ் சல சல பாடலில் சாதாரண பதிப்பை எனக்கு வாசித்து காட்டியபோது, அது நிச்சயமாக இறுதி வடிவம் பெறும்போது பாராட்டத்தக்க ஒன்றாக மாறும் என்று நான் உணர்ந்தேன். பின்னர், சதீஷ் தனது நடன அசைவுகள் மூலம் தனது மாயாஜாலத்தை சேர்த்தார். இசை தாளங்களுக்கு ஏற்ப முழுமையான அசைவுகளை பாடல் கொண்டுள்ளது. ஒளிப்பதிவு முரளி கிரிஷ் இந்த பாடலை தனது அழகான காட்சிகள் மூலம் சுவை கூட்டியிருக்கிறார். இந்த பாடலை பார்வையாளர்கள் எவ்வாறு ரசிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, சண்முக பாண்டியன் தனது நடனம் மற்றும் வெளிப்படுத்துதல் மூலம் தன்னை காட்டிக் கொண்ட விதம் இன்னொரு அழகு” என்றார்.

வம்சி கிருஷ்ணா வில்லனாக நடிக்க, அழகம் பெருமாள், சாய் தீனா மற்றும் பவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களைத் தவிர, ஏ.வெங்கடேஷ், விஜய் டிவி கேபிஒய் புகழ் பப்பு மற்றும் யூடியூப் ‘ஹேண்ட்பேக்’ ஷோ புகழ் ஆஷிக் ஆகியோரும் இந்த படத்தில் ஒரு பகுதியாக உள்ளனர். நாயகனுடன் படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முனிஷ்காந்த் நடிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா நாயகனின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தாய் – மகன் பிணைப்பு இந்த படத்தின் மிகச்சிறந்த ஒரு சிறப்பம்சமாக இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார்.

இந்த் படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் உறுதி செய்யப்படும்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படங்களில் இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.பூபாலன் எழுதி, இயக்குகிறார்.

More Articles
Follows