கழுகு-2 படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் திரு. குரல்

கழுகு-2 படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் திரு. குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Kazhugu 2 movie Krishnas next movie titled Thiru Kural‘தீதும் நன்றும்’ படத்தை தொடர்ந்து N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘திரு.குரல்’.

அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை – தியாகராஜன், ஸ்டண்ட் – ஹரி, நடனம் – ஸ்ரீ க்ரிஷ்.

இந்த படத்தை விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

After Kazhugu 2 movie Krishnas next movie titled Thiru. Kural

பெண்களுக்கு சம உரிமை; பெரியார் சொன்னதை செய்தவர் கலைஞர் : – கார்த்தி

பெண்களுக்கு சம உரிமை; பெரியார் சொன்னதை செய்தவர் கலைஞர் : – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor karthiமறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளரான கார்த்தி, இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்தி…

“முந்திய தலைமுறையில் இருந்த கடைசி மிகப்பெரிய ஜாம்பவான். அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம், நான் எதுவும் புதிதாக சொல்லிவிட முடியாது.

இட ஒதுக்கீட்டை அவர் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால், சின்னச் சின்ன ஊர்களில் இருந்து இவ்வளவு பேர் படித்து பெரிய இடத்துக்கு வந்திருக்க முடியாது.

அதேமாதிரி, பெண்களுக்கு சம உரிமை வாங்கிக் கொடுத்ததும் அவர்தான்.

பெரியார் சொன்ன பல விஷயங்களை, ஆட்சிக்கு வந்து நடைமுறைப்படுத்தியது கலைஞர் தான்.

அப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். நிறைய முறை வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்பாவின் படங்களைத் தவறாமல் பார்த்துவிடுவார்.

நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்து அவரிடம் ஆசி வாங்கச் சென்றபோது, புத்தகம் ஒன்றைக் கொடுத்தார்.

அவருடன் பழகும் எல்லோரையும் பர்சனலாகத் தெரிந்து வைத்திருந்து, ஒவ்வொரு முறை செல்லும்போதும் வீட்டில் உள்ள எல்லோரைப் பற்றியும் விசாரிப்பார்.

ஸ்டாலின் சாரையும் வீட்டில் சென்று பார்த்து வந்தேன்.

அவருடைய குடும்பத்தாருக்கும், திமுகவில் உள்ள அத்தனை பேருக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !

சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sandakozhi 2விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆம் , நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.

விஷால் , லிங்குசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய படமான சண்டக்கோழி வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19 வெளியாகுகிறது

தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் – தமிழருவி மணியன்

தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் – தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilaruvi manianதமிழகத்தின் தனிப்பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியுற்ற கோடானுகோடித் தமிழர்களில் எளியனும் ஒருவன். அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும், கலை உலகிலும் அவர் அளித்த பங்களிப்பைப் புறந்தள்ளிவிட்டு எந்த மனிதராலும் தமிழக வரலாற்றை வரைந்துவிட முடியாது.

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் ஒரே மையப்புள்ளியில் ஒன்றிணையக் கூடியவர்கள். ஓசூருக்குப் பக்கத்தில் தொரப்பள்ளி என்ற குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால், இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக உயர்ந்தவர் இராஜாஜி. சில ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்த விருதுபட்டியில் பிறந்து, காங்கிரஸ் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்ட தமுக்கடித்தத் தொண்டராகத் திகழ்ந்து தன்னுடைய தன்னலமற்றத் தியாகத்தால், இந்தியாவின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய மகத்தான தலைவராக உயர்ந்தவர் காமராஜர். திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள திருக்குவளைக் கிராமத்தில் பிறந்து வலிமைமிக்க எந்தப் பின்புலமுமில்லாமல் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துத் தன்னுடையக் காந்தச் சொற்களாலும், கடும் உழைப்பாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்து, 1996 முதல் இந்தியப் பிரதமர்களை உருவாக்குவதில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர்.

பேசத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியாது. பேசவும் எழுதவும் தெரிந்தவர்களுக்கு மக்கள் நலன் சார்ந்து சோர்வறியாமல் உழைக்கும் உள்ளம் இருக்காது. அளப்பரிய பேச்சாற்றல், வியக்கத்தக்க எழுத்தாற்றல், சோர்வறியா கடும் உழைப்பு ஆகியவற்றின் பூரண வடிவமாகத் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட அபூர்வமான தலைவர் கலைஞர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று வாய் மலர்ந்த அண்ணாவின் வழியில், திறமையுள்ளவர்கள் தனக்கு எதிர் வரிசையில் நின்றாலும், அவர்களை அன்பால் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் பரந்த மனம் கொண்ட கலைஞரைப்போல் வேறொருவரை இந்தப் பாழ்பட்ட அரசியலில் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது.

எண்பது ஆண்டுகள் இடையறாத பொதுவாழ்வுப் பணி, அறுபதாண்டுகள் சட்டப்பேரவையில் சரித்திர சாதனை, ஐம்பதாண்டுகள் தி.மு. கழகத்தின் கட்டுமானம் கலைந்து விடாமல் காப்பாற்றியக் கட்சித் தலைமை, தேர்தல் காலங்களில் சூழலுக்கேற்ப அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்திய நேர்த்தி, தமிழின்பால் கொண்ட தனிப் பெருங்காதல், பேனா முனையில் பிரசவித்த இலக்கிய மணம் கமழும் வசீகரமான வார்த்தைகளின் அணிவகுப்பு, சமூக நீதிக்காகவும் சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் ஆற்றிய அரும்பணிகள் ஆகிய அனைத்தும் இந்த மண்ணில் கடைசித் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும்.

மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இடம் ஒதுக்கிய தமிழக அரசு, கண்மூடும் வரை அண்ணாவைப் போற்றி வாழ்ந்த கலைஞருக்கு, அண்ணா கண்ணுறங்குமிடத்தில் இளைப்பாறுவதற்கு அனுமதி வழங்குவதுதான் முறையான செயல். அதைத் தமிழக அரசு செய்யத் தவறினாலும், நீதிமன்றம் செய்திருப்பது வரவேற்கத் தக்கது.

கலைஞர் நூறாண்டு கடந்தும், இந்த மண்ணில் மக்கள் நலன் சார்ந்து களப்பணியாற்றிட வேண்டும் என்பதுதான் தமிழினத்தின் கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேறாத நிலையில் கலங்கித் தவித்திடும் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் என் ஆறுதல் வார்த்தைகளை வழங்குவதற்கு மேல் வேறென்ன என்னால் செய்ய இயலும்!

கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது : கருணாஸ் MLA

கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது : கருணாஸ் MLA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karunasஅரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழர் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருந்த மாபெரும் அரசியல் சகாப்தத்தின் சப்தம் மெளனித்தது. ஆம் கண்ணீர்த்துளிகள் எங்களில் கண்களில் வழியாக ஊற்றெடுக்கிறது என்பதைவிட எங்கள் இதயத்தின் வழியாக குருதியாக வழிகின்றது.

கலைஞர் என்ற பெயர்ச்சொல் சுழலும் அரசியல் சக்கரத்தின் அச்சாணி! இந்த அச்சாணி முறிந்ததே என்று கதறுகிறோம்! கலைஞர் என்ற உயிர்க்கரு இருட்டைக் கிழிக்க வந்த சூரியன் அது மறைந்ததே என்று இயற்கையிடம் மன்றாடுகிறோம்! மனசெல்லாம் புகைமூட்டமாய் இருள் சூழ்கிறது! மீண்டும் வெளிச்சம் வாராதோ என்று விம்மி அழுகிறோம்!

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சியை வலுவான அடித்தளத்தின்மீது அமரவைத்ததோடு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தும் சக்தியாக உருவெடுத்த மாபெரும் தலைவரை தமிழகம் இழந்து தவிக்கிறதே என்று அழுது தவிக்கிறோம்.

திராவிடம் என்ற கலாச்சார சொல்லை கண்டறிந்தவர் பெரியார்! அதற்கு அணிசேர்த்தவர் அண்ணா! ஆனால் இரத்தமும் – சதையும் வழங்கி உயிர்சேர்ந்தவர் கலைஞர்.

கலைஞரின் நீண்ட அரசியல் வாழ்வு, தமிழர் வரலாற்றைப் திருப்பிக்காட்டும் காலக்கண்ணாடி.. தமிழ்நாட்டில் சமூக நீதியின் சாதனைகளை இந்தியக் கூட்டாட்சியின் உச்சியில் நின்று காலம் அறிந்து கூவிய சேவல் கலைஞர்! சமூகநீதிக்கான இயக்கத்தை அரசியல் கட்சியாக உருமாற்றி அதன் வழி இன்றைய தலைமுறைக்கான திசைக்காட்டியான நிற்பவர் கலைஞர்!

60 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்தில் உறுப்பினராகி உயர்ந்தவர் கலைஞர் அன்றி வேறுயார்? இது வரலாற்றின் உச்சம்! ஒரு இயக்கத்திற்கு தலைவராக 50 ஆண்டு காலம் நின்று உழைத்தவர் இவரின்றி வேறுயார்! இதுதான் அசாத்தியத்தின் அடையாளம்!

தமிழ்நாட்டு அரசியல் ஆணிவேருக்கு தண்ணீரைப் பாய்ச்சிய தமிழ்நதி வற்றிவிட்டதை நினைத்து வேதனை அடைகிறோம்! காற்றை செலுத்திய கதிரவன் மூச்சை நிறுத்தியதை கண்டு சொல்லெண்ணா துயரம் அடைகிறோம்!

கலைஞர் எனும் காலச்சுவடுகளை கரையான்கள் அறித்துவிடமுடியாது! கலைஞர் எனும் உதய சூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது! தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை என்றான் பாவேந்தன்! கலைஞர் தமிழுக்கு தமிழருக்கு தொண்டு செய்து தமிழ்வேந்தன் அவர் சாவைத் தழுவினாலும் அவரது புகழ் என்றுமே சாகாது!

இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ., கருணாஸ் புகழஞ்சலி செலுத்தினார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை *எம்பிரான்* பூர்த்தி செய்வான்.. : தயாரிப்பாளர் சுமலதா

ரசிகர்களின் எதிர்பார்ப்பை *எம்பிரான்* பூர்த்தி செய்வான்.. : தயாரிப்பாளர் சுமலதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

embiran stills ‘எம்பிரான்’ படக்குழு மிகுந்த மனநிறைவுடன் மிக உற்சாகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள் பி. பஞ்சவர்ணம் மற்றும் வி சுமலதா ஆகியோர், மிகச்சிறப்பான ட்ரைலரால் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் வி சுமலதா கூறும்போது, “ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ‘குருட்டுத்தனமான வாய்ப்பு’ முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரை காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானை பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்தோம். ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் டிரெய்லர் நாங்கள் எதிர்பார்த்தததை விட சிறப்பாக வந்திருக்கிறது. ஒருவேளை, இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக தெரியலாம், ஆனால் தயாரிப்பாளர்களாக எங்களுக்கு இது மிகவும் திருப்தி அளிக்கிறது” என்றார்.

இயக்குனர் கிருஷ்ணா பாண்டி கூறும்போது, “படம் இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள் பஞ்சவர்ணம் சார் மற்றும் சுமலதா மேடம் தான் மிக முக்கிய காரணம். வழக்கமாக, ஒரு புதிய குழுவுடன் இணையும் போது, தயாரிப்பாளருக்கு பட உருவாக்கத்தின்போது சில சந்தேகங்கள் ஏற்படும். பின்னர் படப்பிடிப்புக்கு வந்து என்ன நடக்கிறது என்று அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அது தான் பேப்பரில் இருந்த திரைக்கதை அப்படியே திரையில் வர உதவியாக இருந்தது” என்றார்.

ட்ரைலர் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த டி. மனோஜ் (படத்தொகுப்பு), பிரசன் பாலா (இசை) மற்றும் எம். புகழேந்தி (ஒளிப்பதிவு) ஆகியோருக்கு நிபந்தனையற்ற நன்றி தெரிவிக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.

ரெஜீத் மேனன், ராதிகா பிரீத்தி, பி. சந்திர மவுலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் மற்றும் இன்னும் சில நடிகர்கள் இந்த ரொமண்டிக் திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார்கள். இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும்.

More Articles
Follows