விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tik tok rowdy baby suriyaடிக் டாக் மொபைல் ஆப்பை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளது.

ஆனால் இந்த தடை வருவதற்கு முன்பே டிக் டாக் மூலம் பிரபலமானவர் சூர்யா.

இவரை இவரது ரசிகர்கள் ரவுடி பேபி எனவும் அழைக்கின்றனர்.

தற்போது டிக் டாக் செயலிக்கு தடை உள்ளதால் அவர் தன் பொழுதுபோக்குக்காக தொழிலை மாற்றி விபச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

சூர்யா என்ற இந்த சுபுலட்சுமி புரோக்கர் மூலமாக விபச்சார தொழில் செய்து வந்துள்ளார்.

திருச்சி மாவட்ட பகுதியில் ஸ்பா சென்டர்களில் நடந்த சோதனையின் போது அவர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் டிக்டாக் ரவுடி பேபி சூர்யா உட்பட 12 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tik Tok fame Rowdy Baby Suriya arrested for prostitution in Trichy?

போயஸ் கார்டன் வாசிகள் அவதி.. முடிவை மாற்றிய ரஜினி..; போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

போயஸ் கார்டன் வாசிகள் அவதி.. முடிவை மாற்றிய ரஜினி..; போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthவிரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது கட்சிப்பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி.

கட்சி விவரங்களை 2020 டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

போயஸ்கார்டன் இல்லம் வரும் ரசிகர்களின் வருகை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ரஜினியுடைய போயஸ் கார்டன் இல்லம் & தெருவிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

12-15 தமிழக போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினியின் இல்லம் செல்லும் வழியில் இரு இடங்களில் தடுப்புகள் அமைத்து, ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதனால் போயஸ் கார்டனில் வாசிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவர்கள் பாதிக்கப்படுவது ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு, காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

TN Police withdraw security to Rajini’s house after his request

‘உறியடி’ உதவி இயக்குனர் அபாஸ் இயக்கத்தில் ஹீரோவாகும் ‘உறியடி’ விஜயகுமார்

‘உறியடி’ உதவி இயக்குனர் அபாஸ் இயக்கத்தில் ஹீரோவாகும் ‘உறியடி’ விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Uriyadi Vijay Kumarஇயக்குநர், நடிகர் விஜய்குமார் ‘உறியடி’ மற்றும் ‘உறியடி 2’ என இரண்டு துணிச்சலான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர்.

சமீபத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதியிருந்தார்.

தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தை ‘உறியடி’ 2 பாகங்களிலும் விஜய்குமாரின் உதவி இயக்குநராக இருந்த அபாஸ் இயக்குகிறார்.

ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸின் முதல் முழுநீள திரைப்படத் தயாரிப்பு இது. முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன.

மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு செல்வதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

Uriyadi Vijay Kumar’s next is with debutant film maker Abbas

JUST IN கமல் பட ஸ்டைலை காப்பியடித்து விஜய் பட அறிவிப்பு. ‘தளபதி 65’ இயக்குனர் & இசையமைப்பாளர் யார்.?

JUST IN கமல் பட ஸ்டைலை காப்பியடித்து விஜய் பட அறிவிப்பு. ‘தளபதி 65’ இயக்குனர் & இசையமைப்பாளர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் அடுத்தாண்டு 2021 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவுள்ள தளபதி 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதலில் ஏஆர் முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில் பின்னர் விலகினார்.

எனவே விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால் கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதாக தகவல்கள் வந்தன என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அனிருத் இசையமைக்கிறார் என கூறப்பட்டது.

அதன்படி இதே கூட்டணியின் படி சற்றுமுன் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ பட அறிவிப்பு வெளியானபோது டைட்டில் மோசன் போஸ்டர் செம ஸ்டைலிஷாக ரிலீசானது.

அதே பாணியை விஜய் 65 படக்குழுவும் காப்பியடித்துள்ளது.

இதற்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இது போல மிக பிரம்மாண்டமான டைட்டில் வீடியோவை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 65 motion poster copied from Vikram title teaser?

thalapathy 65 images

விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா இணையும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பூஜையோடு துவங்கியது

விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா இணையும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பூஜையோடு துவங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaathuvaakula Rendu Kaadhalமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது.

படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம்.

இளைஞர்களை ஈர்க்கும் பக்கா எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாக்களைத் தரும் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

மேலும் படத்தின் வெற்றிக்கு இப்பவே உத்திரவாதம் தருவது போல படத்தின் இசைப் பணியை அனிருத் துவங்கியிருக்கிறார்.

பெரிய பட்ஜெட்டில் ஸ்ட்ராங்க் எண்டெர்மெயிண்ட் விசயங்களோடு தயாராகும் இப்படம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Vijay Sethupathi begins shooting for Kaathuvaakula Rendu Kaadhal

கன்னட சில்க் ஸ்மிதா சென்னைக்கு வராத காரணத்தினால் மைசூருக்கே சென்று சூட்டிங் நடத்திய ‘சூறாவளி’ படக்குழு

கன்னட சில்க் ஸ்மிதா சென்னைக்கு வராத காரணத்தினால் மைசூருக்கே சென்று சூட்டிங் நடத்திய ‘சூறாவளி’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kannada actress Aalishaவடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது.

இங்கே வந்த அந்த கிரிமினல்ஸ் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர்.

பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.

ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற நாயகன் பண்னையாரின் மகளை நேசிக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பளை சூறாவளி போல் சூறையாட தயாராகிறார்.

அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா?

கதை சுருக்கம்

தமிழில் கவர்ச்சியில் புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா அளவுக்கு கன்னடத்தில் தற்போது கவர்ச்சியில் கலக்கும் ஆலிஷா “சூறாவளி” தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கார்.

சென்னைக்கு வர தேதியில்லாததால் சூறாவளி படக்குழுவினர் மைசூர்க்கு சென்று அரசுக்கு சொந்தமான ஒரு காட்டு பங்களாவில் அனுமதி வாங்கி படப்பிடிப்பிற்கு தயாரான, கூட்டத்தை பார்த்து மிரண்டு போன அதிகாரிகள் அனுமதி மறுக்க அன்று ஒரு இரவுக்கு மட்டும் அனுமதி வாங்கி அன்றே படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறார்கள்.

பாடல் சூப்பராக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

தயாரிப்பு நிறுவனம் – லால்ராய் அசோசியேட்ஸ்

நடிகர்கள் – தர்மா, தர்ஷினி, ஆலிஷா

இசை அமைப்பாளர் – ஜேக்கப் சாம்யேல்

கேமராமேன் – சந்திரன்சாமி

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாலு & பால்கி

தயாரிப்பு – P. லால்பகதூா்

Sooravali movie shoot wrapped up in mysore

More Articles
Follows