தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மெட்ரோ’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சிரிஷ்.
இவர் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு பல உதவிகள் புரிந்து வருகிறார்.
தற்போது கொரோனா தொற்று காலத்தில் பல பிரபலங்கள் “தடுப்பூசி போட்டுக் கொண்டோம்” என போட்டோ போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இவரோ சென்னையில் இலவச தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது…
“பல்வேறு அமைப்புகளால் தடுப்பூசி முகாம்களை ஆரம்பித்து வைப்பதற்கு நான் அழைக்கப்பட்டேன்.
தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைக்கச் செல்வதற்குப் பதிலாக, மக்களை ஊக்குவிப்பதற்காக சொந்தமாக தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்தேன்.
நாங்கள் தடுப்பூசிகளைப் பெற்று பத்திரிகையாளர்களுக்கும் இலவச முகாமையும் ஏற்பாடு செய்தோம்.
மேலும் பொதுமக்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாமுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் கொடுத்தோம்”
இவ்வாறு சிரிஷ் தெரிவித்தார்.
கடந்த வாரம், ஜூலை 24ல் FEFSI (தென்னிந்தியாவின் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு) தொழிலாளர்களுக்கும தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Sirish arranged free vaccine camp for public