ரிலீசுக்கு தியேட்டர் இல்ல ஆனா புரோமோசனுக்கு க்யூ நிக்குது : தரணிதரன்

ரிலீசுக்கு தியேட்டர் இல்ல ஆனா புரோமோசனுக்கு க்யூ நிக்குது : தரணிதரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We are not getting theaters to release But promotion agents in queue says Dharanidharanபர்மா படத்தின் முமூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு இயக்குனர் ஆனார் தரணிதரன்.

இவர் தற்போது தயாரித்து இயக்கியுள்ள ராஜா ரங்குஸ்கி படம் வருகிற செப்டம்பர் 21ல் வெளியாகவுள்ளது.

இதில் மெட்ரோ சிரிஷ் மற்றும் சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தரணிதரன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பேசும்போது…. இந்த குறுகிய காலத்தில் இயக்கி முடித்துவிட்டேன். ஆனால் வெளியீட்டுக்கு ஒரு வருடமாக காத்திருக்கிறோம்.

காரணம் ரிலீசுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. டாப் ஹீரோக்கள் படங்களுக்குதான் தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

படம் ரீலீசுக்கு தியேட்டர் கிடைக்காமல் நாங்கள் இருக்கிறோம். ஆனால் புரோமோசன் குடுங்க.

நாங்க பண்ணி தர்றோம். ட்விட்டரில் டிரெண்ட் ஆகுறோம் என ஒரு கூட்டம் நிற்கிறது. இவர்களிடம் என்ன சொல்வது..?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தரணி தரன்.

We are not getting theaters to release But promotion agents in queue says Dharanidharan

raja ranguski press meet

மெட்ரோ சிரிஷ் கேட்டதற்காக கதை கேட்காமல் சம்மதம் சொன்ன சாந்தினி

மெட்ரோ சிரிஷ் கேட்டதற்காக கதை கேட்காமல் சம்மதம் சொன்ன சாந்தினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chandhini committed to Shirishs Raja Ranguski movie without asking Storyமெட்ரோ படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சிரிஷ். இவர் அடுத்து ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’.

இவருடன் சாந்தினி தமிழரசனும் நடித்துள்ளார். இதில் சிரிஷ் கேரக்டர் பெயர் ராஜா. சாந்தினி கேரக்டர் பெயர் ரங்குஸ்கி.

பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 21ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அந்த சந்திப்பில் நாயகன் சிரிஷ் பேசியதாவது…

“இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது அப்பாவியான ஒரு முகம் தேவைப்பட்டது. அதற்கு நான் பொருத்தமாக இருந்ததால் நடித்தேன்.

யுவன் சார் இசை தான் இந்தப் படத்துக்கு வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். எனவே நான், தயாரிப்பாளர், இயக்குநர், மூவரும் அவரைப் சந்தித்தோம். அவர் கதையைக் கேட்டு, உடனே ஓகே சொல்லிவிட்டார்.

இப்படத்தில் முதலில் வேறு ஒரு நடிகைதான் கமிட் ஆனார். ஆனால் அதன் பின்னர் அவர் விலகி விட்டார்.

அதன் பின்னர் என் தோழியான சாந்தினியிடம் கேட்டோம்.

நான் அழைத்ததற்காக கதையே கேட்காமல் நடிக்க வந்தார். என் மீதும், இயக்குநர் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையை அது காட்டுகிறது. அவர் கேரக்டர் மிக நன்றாக வந்துள்ளது” என்று பேசினார்.

Chandhini committed to Shirishs Raja Ranguski movie without asking Story

Breaking ஜிவி.பிரகாஷ் & ஆதிக்ரவி இணையும் அடுத்த படத்தலைப்பு வெளியானது

Breaking ஜிவி.பிரகாஷ் & ஆதிக்ரவி இணையும் அடுத்த படத்தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Adhik Ravichandrean teams up again for Kadhalai Thedi Nithya Nandhaஜீ.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’.

2015-ம் ஆண்டு ரிலீஸான இப்படத்தை பிட்டு படம் ரேஞ்சுக்கு அனைவரும் திட்டி தீர்த்தார்கள்.

படத்தில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

அதுவே இந்த படத்துக்கு விளம்பரமாகவும் இது மாபெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தை அடுத்து சிம்பு 3 வேடங்களில் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கியனார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் படு தோல்வியை சந்தித்தது.

எனவே தற்போது மீண்டும் ஜிவி. பிரகாஷ் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆதிக்.

இந்தப் படத்துக்கு ‘காதலை தேடி நித்யா நந்தா’ எனத் தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் அமைரா தஸ்தூர் ஹீரோயினாக நடிக்க, சோனியா அகர்வால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இப்பட போஸ்டரில் ஜிவி பிரகாஷின் தோற்றத்தை பார்க்கும்போது பேய் லுக்கில் கண்கள் இல்லாமல் வெறித்தனமாக நிற்கிறார்.

இதுவரை 80% சூட்டிங் முடிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

GV Prakash and Adhik Ravichandrean teams up again for Kadhalai Thedi Nithya Nandha

Breaking யோகிபாபு அசத்தும் *கூர்கா* பட பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

Breaking யோகிபாபு அசத்தும் *கூர்கா* பட பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedian YogiBabu plays lead role in Gurkha first look releasedஜிவி.பிரகாஷ் நடித்த டார்லிங் மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன்.

தற்போது அதர்வா, ஹன்சிகா நடிப்பில் ‘100’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்குவதாக வந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

ஆனால், ‘நான் ஹீரோ கிடையாது. ஒரு வெளிநாட்டுக்காரரும் நாயும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நான் படம் முழுக்கக் காமெடியனாக கூர்கா வேடத்தில் நடிக்கிறேன்’ என கூறியிருந்தார் யோகிபாபு.

இந்நிலையில், இன்று சற்றுமுன் ‘கூர்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதில், யோகிபாபு அருகில் ஒரு நாய் ஒன்றும் நிற்கிறது.

கூர்கா கெட்டப்பில் காக்கி உடையில் அசத்தலாக இருக்கிறார் யோகிபாபு.

4 Monkeys Studio என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாக உள்ளதாக அந்த பர்ஸ்ட் லுக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comedian YogiBabu plays lead role in Gurkha first look released

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படத்தில் சிவகார்த்திகேயன்

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படத்தில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan plays lead role in short film directed by Thiruஅண்மையில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி படத்தை இயக்கியிருந்தார் திரு.

இப்படத்தை அடுத்து இவர் ஒரு குறும்படத்தை இயக்குவதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

தற்போது இது தயாராகி விரைவில் வெளியாக உள்ளது.

இப்படம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கான விழிப்புணர்வை சொல்ல வருகிறாம்.

இதில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan plays lead role in short film directed by Thiru

வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்

வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadiveluஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு 2 வேடங்களில் நடித்து 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

இதனையடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே படக்குழுவினருடன் வடிவேலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இப்படியாக இந்த பிரச்சினை நீடித்து வந்தாலும் முடிவு ஏற்படவில்லை.

இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர்.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கும் பிறகும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

தற்போது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்துள்ளது.

இப்படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.

எனவே இந்த படப்பிரச்சினையை முடியும் வரை, வடிவேலுக்கு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு தரக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows