தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பர்மா படத்தின் முமூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு இயக்குனர் ஆனார் தரணிதரன்.
இவர் தற்போது தயாரித்து இயக்கியுள்ள ராஜா ரங்குஸ்கி படம் வருகிற செப்டம்பர் 21ல் வெளியாகவுள்ளது.
இதில் மெட்ரோ சிரிஷ் மற்றும் சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தரணிதரன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசும்போது…. இந்த குறுகிய காலத்தில் இயக்கி முடித்துவிட்டேன். ஆனால் வெளியீட்டுக்கு ஒரு வருடமாக காத்திருக்கிறோம்.
காரணம் ரிலீசுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. டாப் ஹீரோக்கள் படங்களுக்குதான் தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
படம் ரீலீசுக்கு தியேட்டர் கிடைக்காமல் நாங்கள் இருக்கிறோம். ஆனால் புரோமோசன் குடுங்க.
நாங்க பண்ணி தர்றோம். ட்விட்டரில் டிரெண்ட் ஆகுறோம் என ஒரு கூட்டம் நிற்கிறது. இவர்களிடம் என்ன சொல்வது..?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தரணி தரன்.
We are not getting theaters to release But promotion agents in queue says Dharanidharan