‘பட்டத்து அரசன்’ தந்த பாடம்.; பரவசத்தில் ‘சித்தப்பு’ துரை சுதாகர்

‘பட்டத்து அரசன்’ தந்த பாடம்.; பரவசத்தில் ‘சித்தப்பு’ துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம். உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார் ‘களவாணி’ துரை சுதாகர்!

தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய ‘களவாணி 2 ‘படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர்.

அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் தான் அந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்கிறார் .

“நான் களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம் எனக்குப் அழுத்தமான அறிமுகமும் பெரிய அங்கீகாரமும் கிடைத்தன.என்னை களவாணி துரைசுதாகர் என்றே பலரும் அழைக்கிறார்கள்.

அதற்காக இயக்குநர் அண்ணன் ஏ.சற்குணம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெறும் நன்றி என்று கூறுவதில் என்னுடைய மன உணர்வைக் கூறிவிட முடியாது.

இப்போது நான் பட்டத்து அரசன் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பெருமைக்குரிய வாய்ப்பு.படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகிறது.

துரை சுதாகர்

இன்று மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ள லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் என்கிற பிரம்மாண்டமான படத்தின் வெற்றி அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லும்.

மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும், தான் உணர்ந்த விஷயங்களைப் படமாக்குவது என்பதில் கொள்கையாக வைத்திருக்கும் அண்ணன் சற்குணம் இயக்கி இருக்கிறார் அவர் இயக்கத்தில் நடித்தது ஒரு பெருமை.

இந்தப் படத்தில் அதர்வா, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ் , ஆர். கே. சுரேஷ், ராதிகா, சிங்கம்புலி, பாலசரவணன் போல எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில், தேசிய விருது பெற்ற திறமை மிக்க இயக்குநரின் இயக்கத்தில், இவ்வளவு நட்சத்திரங்கள் மத்தியில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பட்டத்து அரசன் கதை கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு குடும்பக் கதை அமைப்பு கொண்ட படம். காட்சிகளை மிக அழகாக எடுத்துள்ளார் இயக்குநர்.

நான் ராஜ்கிரண் அவர்களின் பையனாக நடித்திருப்பேன். ராஜ்கிரன் அவர்கள் பிரபலமான தயாரிப்பாளர் மட்டுமல்ல உச்சத்துக்கு சென்ற நடிகர். ஏராளமான திரைப்பட அனுபவங்களைப் பெற்றவர். அவருடன் நடிக்கும் போது எனக்கு முதலில் சற்று தயக்கமாகவும் மிரட்சியாகவும் இருந்தது.

ஆனால் இப்படிப்பட்ட மனப் பதற்றத்துடன் நடித்தால் சரியாக நடிப்பு வராது என்பதை அவர் உணர்ந்து கொண்டு முதல் நாளே என்னுடன் இயல்பாக பேசினார். என்னைப் பற்றி விசாரித்து தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

முதன் முதலில் நடித்ததை விட அவர் ஊக்கப்படுத்திய பின் நடித்தது எனக்கே நம்பிக்கையாகவும் திருப்தியாகவும் இருந்தது.

அதுமட்டுமல்ல நான் நடித்த போது என்னைப் பாராட்டிய ஊக்கப்படுத்தினார்; தட்டிக் கொடுத்தார். அனுபவம் உள்ள நடிகர் போல் நடிக்கிறீர்கள் என்று கூறினார். நான் முன்பு நடித்த படங்களை அவர் பார்த்திருக்கவில்லை.

ஏற்கெனவே நடித்திருக்கிறீர்களா? என்று விசாரித்தார். ஊக்கமாக இருந்தது . அதேபோல் ஜெயப்பிரகாஷ் அவர்களும் “நல்லா பண்றீங்க பயமில்லாமல் செய்யுங்க” என்று ஊக்கப்படுத்தினார் அண்ணன் சிங்கம்புலி இந்தப் படப்பிடிப்பு நடந்த 40 நாட்களையும் கலகலப்பாக ஆக்கினார் .

படத்தில் கதைப்படி நாங்கள் மாமன் மச்சான்களாக நடித்திருக்கிறோம். ஆனால் நேரில் அவர் ஒரு சகோதரர் போல , நண்பரைப் போலப் பழகினார்.

துரை சுதாகர்

அப்படித்தான் அண்ணன் ஆர். கே. சுரேஷும் எளிமையாகப் பழகினர்.

கதாநாயகன் சகோதரர் அதர்வாவும் மிகவும் சகஜமாகப் பழகினார் அவர் ஒரு நட்சத்திரத்தின் பிள்ளை என்கிற எந்த விதமான எண்ணமும் இல்லாமல் அனைவரிடம் பழகியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஒரு பள்ளி மாணவரைப் போலவும் கல்லூரி மாணவரைப் போலவும் தெரிந்தார் .

அவர் சகஜமாகப் பேசிப் பழகி அனைவருடனும் இருந்த இடைவெளியைக் குறைத்து இயல்பாக மாற்றினார். அது நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போகும் நம்பிக்கையை எனக்கு அளித்தது.

இப்படித்தான் அந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அன்புடனும் சகஜமாகவும் பழகினார்கள். பலவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். இப்படி ஒரே படத்தின் மூலம் பலருடன் பேசிப் பழகும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது.

இதற்கு முன்பு களவாணி படத்தில் நடித்த போது நான் வருகிற காட்சியில் மக்கள் கூட்டம் நிறைய இருக்கும். ஆயிரம் பேர் மத்தியில் நடிக்க வேண்டி இருந்தது .

அப்போது அது ஒரு சவாலாக இருந்தது. இப்போது பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.

இப்படி ஒரு மெகா கூட்டணியில் இடம் பெறும் வாய்ப்பு எப்போதும் அமைந்து விடாது . அதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எப்போதுமே இயக்குநர் அண்ணன் சற்குணம் கதைக்கேற்ற முகங்களைத்தான் தேடுவார். அப்படித்தான் இதிலும் அனைவரையும் பாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து நடிக்க வைத்தார். அனைவரது கதாபாத்திரங்களையும் மிகவும் அழகாகச் சித்தரித்திருப்பார்.

எனவே நான் பெரிதாக நடித்தேன் என்று சொல்வதை விட அவர் அப்படி வடிவமைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் எப்போதும் தான் மட்டும் வளர வேண்டும், தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்ல. தன் படத்தில் உள்ளவர்களும் தான் அறிமுகப்படுத்தியவர்களும் வளர வேண்டும் என்று நினைப்பவர் .

தன் ஒவ்வொரு படத்திலும் யாரையாவது அறிமுகம் செய்து கொண்டே இருப்பார். அப்படி இந்தப் படத்தில் கலை இயக்குநரையும் கதாநாயகியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

எனவே, என்னைப் போலவே அவரும் மேலும் மேலும் வளர வேண்டும் பெரிய வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று நான் விரும்பி வாழ்த்துகிறேன். அவருக்கு இந்த நேரத்தில் மனம் நெகிழ்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன். நன்றி” இவ்வாறு கூறினார் துரை சுதாகர்.

துரை சுதாகர்

Actor Durai Sudhakar reveals experience of Pattathu Arasan

புதிய சினிமா சரித்திரம் : BABA ReRelease FDFS.; ரஜினிகாந்துக்கு ‘காந்தாரா’ கொடுத்த ஐடியா

புதிய சினிமா சரித்திரம் : BABA ReRelease FDFS.; ரஜினிகாந்துக்கு ‘காந்தாரா’ கொடுத்த ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்கு முன்பு 2002 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் வெளியான திரைப்படம் ‘பாபா’.

ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி தயாரித்து நடித்திருந்தார்.

அண்ணாமலை – வீரா – பாட்ஷா ஆகிய ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு ‘பாபா’ படத்தை இயக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா.

அந்த நாட்களில் இதுபோல ஒரு பரபரப்பை எவரும் கண்டதில்லை என்ற அளவிற்கு ‘பாபா’ பரபரப்பாக பேசப்பட்டது.

இதுதான் 2Kவில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ரஜினி படமாகும்.

இந்த நிலையில் ‘பாபா’ படத்தை விரைவில் ரீ-ரீலீஸ் செய்ய உள்ளதாக வந்த தகவல்கள் தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த ஐடியாவை கொடுத்ததே ரஜினி தான் என சுரேஷ் கிருஷ்ணா சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் ‘காந்தாரா’ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதுவும் ஒரு பேண்டஸி படம்தான். மேலும் தமிழில் ஃபேன்டசி படங்கள் வந்து வருட கணக்கில் ஆகிவிட்டது.

எனவே ‘பாபா’ படத்தை ரீ-ரீலீஸ் செய்ய வேண்டும் என ரஜினி விருப்பப்பட்டாராம்.

இந்த நிலையில் ‘பாபா’ படத்தை தனது தியேட்டரில் அதிகாலை 4 மணி காட்சிக்கு திரையிட உள்ளதாக சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுப்படங்கள் மட்டுமே அதிகாலை நள்ளிரவு 1 மணி காட்சி 4 மணி காட்சி என திரையிடப்படும்.

தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு பாபா ரிலீஸ் என்றாலும் அதற்கு அதிகாலை 4Am காட்சி என்பது திரையுலகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் உலக சினிமா சரித்திரத்தில் ரீ-ரீலிஸில் முதல் படம் எனலாம்.

மேலும் ‘பாபா’ படத்தின் உரிமை ரஜினியிடம் மட்டுமே உள்ளதால் பெரும்பாலும் எந்த YouTube தளத்திலும் இந்த படம் இல்லை.

எனவே பாபா படத்தின் மூலம் மீண்டும் ஒரு பரபரப்பு உருவாகும்.. இந்த படம் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாபா

Special FDFS arranged for Baba Re Release

Varisu Vs Thunivu FDFS : அஜித் படத்திற்கே முன்னுரிமை; டென்ஷனில் விஜய் ரசிகர்கள்!

Varisu Vs Thunivu FDFS : அஜித் படத்திற்கே முன்னுரிமை; டென்ஷனில் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படமும் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

இந்த இரு படங்களும் ஒரே நாளில் மோத உள்ளதால் தமிழ் திரையுலகில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பைப்பற்றியுள்ளது. ‘வாரிசு’ பட தமிழக வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்திற்கு நள்ளிரவு 1 மணி காட்சிக்கு கேடிஎம் அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் ‘வாரிசு’ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டால் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் இந்த ஏற்பாடுகளை சிலர் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இது உறுதியாகும் பட்சத்தில் அஜித் படத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த படத்தை ஆளுங்கட்சி தரப்பு வெளியிட உள்ளதால் இந்த அனுமதியை அவர்கள் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் விஜய் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

Thunivu gets more importance than Varisu FDFS

பிரபல தமிழ் இயக்குனருடன் இணையும் பிரபாஸ் ?

பிரபல தமிழ் இயக்குனருடன் இணையும் பிரபாஸ் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி 67 படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் குறித்து பல தகவல்கள் வந்துள்ளன.

அவர் ‘RRR’ மற்றும் ‘KGF’ நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் யாஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது .

சமீபத்திய தகவலின் படி , லோகேஷ் கனகராஜ் பாகுபலி நடிகர் பிரபாஸுடன் ஒரு புதிய படத்தில் இணைவதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்..!

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலு இப்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சுராஜ் இயக்கி, நடிகர்கள் ராவ் ரமேஷ், ஆனந்த் ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தின் சிறிய ப்ரோமோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள லைக்கா நிறுவனம் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளது.

Vadivelu’s ‘Naai Sekar Returns’ release date update

நயன்தாரா செய்த நெகிழ்ச்சியான காரியம்.; மருமகளை பாராட்டும் மாமியார்

நயன்தாரா செய்த நெகிழ்ச்சியான காரியம்.; மருமகளை பாராட்டும் மாமியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழு வருடங்களாக காதலித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

அக்டோபர் மாதத்தில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

வாடகைதாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றது அப்போது சர்ச்சையானதால் இது தொடர்பான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்த பிறகு சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தன் மருமகள் நயன்தாரா பற்றி விக்னேஷ் சிவனின் தாயார் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது..

“நயன் வீட்டில் சமையல், அயர்னிங், டிரைவர், செக்யூரிட்டி, கிளீனிங், தோட்ட வேலை போன்ற வேலை செய்ய 8-10 பேர் உள்ளனர்.

அதில் வேலை செய்யும் ஒரு அம்மாவுக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருந்துள்ளது.

இதனையறிந்து உடனே அவருக்கு கொடுத்து உதவினார் நயன்தாரா.

இதை நான் நேரிலேயே பார்த்தேன். அந்த அம்மா அவர்கள் வீட்டில் பல காலமாக வேலை செய்தவர்.” என நெகிழ்ந்து மருமகள் நயன்தாராவை பாராட்டி இருக்கிறார் மாமியார்.

More Articles
Follows