தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது சில மாதங்களுக்கு முன் அம்பலமானது.
பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25% – 30% வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் முதலீடு செய்திருந்தனர்.
ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா மோசடி புகாரில் சிக்கியது.
மக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 350 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா நிறுவனம் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ரூசோ என்பவரிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வரையில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
வெளிநாட்டில் இருக்கும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் கடந்த 6 மாதமாக சென்னை திரும்பவில்லை.
காவல்துறை விசாரணைக்கு பயந்து அவர் அங்கேயே தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
Aarudhra Gold Scam Russo to RK Suresh bought Rs. 15 crores