தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்.
இதனையடுத்து கமல் இயக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை ‘தேவர் மகன்’ பட பார்ட் 2ஆக எடுக்கவிருக்கிறாராம்.
இதில் வடிவேலு நடிக்கவுள்ளதாக வந்த தகவல்களை பார்த்தோம். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் வடிவேலுவால் மற்றொரு படத்திற்கு ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.
நடிகர் ஆர்.கே. நாயகனாக நடித்து, தயாரிக்க இருந்த ‘நானும் நீயும் நடுவுல பேயும்‘ என்ற படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம்.
இதற்காக வடிவேலுக்கு அட்வான்ஸ் ரூ. 1 கோடியை கொடுத்துள்ளனர்.
ஆனால், கதையில் சில மாற்றங்கள் தேவை என வடிவேலு சூட்டிங் வரமால் இழுத்தடியுள்ளார்.
இதனால், முன்பணம் கொடுத்த 1 கோடி ரூபாயைத் திரும்ப கேட்டுள்ளார் ஆர்.கே.
அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை என ஆர்.கே. புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில்.. ‘‘தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை.
ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலு நடிப்பாரா? என்பது கூட இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் இந்த அலப்பறையா?
Actor RK complaint against Comedy actor Vadivelu