தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் கிரிக்கெட் பேமஸ் என்றால், கேரளத்தில் புட்பால்தான்.
பெரும்பாலான இளைஞர்கள் அங்கு ஓடிஆடி கால்பந்து விளையாடுவதை பார்க்கமுடியம்.
இந்நிலையில், கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் அவர்களின் வாழ்க்கை பற்றி ஒரு படம் உருவாகவிருக்கிறது.
பிரஜேஷ் சென் இயக்கவுள்ள இப்படத்தில் நாயகன் ஜெயசூர்யாதான்.
ஜெயசூர்யாவை வைத்துதான் கதையை எழுதினேன் என்று தெரிவித்திருக்கிறார் இயக்குனர்.
கேப்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெயசூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக போகிறார்களாம்.
தமிழ்நாட்டுக்கு கேப்டன் என்றால் அது விஜயகாந்துதான். அதுபோல் கேரளாவின் கேப்டனாக ஜெயசூர்யா ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.