தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா தற்போது சென்னை, அடையாறில் நடைபெற்று வருகிறது.
இந்த மண்டபம் ரூ.2.80 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.
இவ்விழாவிற்கு வந்த ரஜினிக்கு ஓ.பி.எஸ் பொன்னாடை போர்த்தினார். கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தினார்.
இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது….
நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜிகணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி.
என்னை இந்த விழாவுக்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினருக்கு நன்றி.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி. அவர் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதை இங்கே மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைக்கும் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
சிவாஜி ஒரு நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படவில்லை.
பல சுதந்திர போராட்ட வீரர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் நடிகர் திலகம்.
பல புராணக் கதைகளில் உள்ள கேரக்டர்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் என்பதால்தான் இந்த மணிமண்டபம்” என்று பேசினார்.
Deputy CM OPanneer Selvam is lucky person says Rajinikanth