தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாரத பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்தார் நடிகை கௌதமி.
அதன்பின்னர் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்தார்.
இதனால் அவர் மீண்டும் பா.ஜ.கட்சியில் இணையப் போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து கௌதமி விளக்கம் அளித்துள்ளார். அதில்….
“லைப் அகெய்ன்’ (LIFE AGAIN) எனும் புற்று நோய் மறுவாழ்வு அமைப்பை தொடங்க உள்ளேன்.
இது குறித்து பேசவும் வாழ்த்து பெறவும் பிரதமரை சந்தித்தேன். அரசியல் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை.
எனக்கு எந்த எல்லைகளும் இல்லை. எனது மகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார் கௌதமி.