மக்களுடன் பவன் கல்யாண்.; ‘உஸ்தாத் பகத்சிங்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீசானது

மக்களுடன் பவன் கல்யாண்.; ‘உஸ்தாத் பகத்சிங்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீசானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் – ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய போஸ்டரை பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.‌

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்: படத்தின் பிரத்யேக போஸ்டரை அப்படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் பவன் கல்யாண் காக்கி வண்ண சட்டையும், கல்லா லுங்கியும் அணிந்து, மாஸான தோற்றத்தில் தோன்றுவது ..ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

வெகுஜன மக்களின் ரசனையை அறிந்த இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் இதுவரை ஏற்றிராத மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக போஸ்டரில் பவன் கல்யாண் ரத்தம் தோய்ந்த வாளைப் பிடித்துக் கொண்டிருப்பதும்… அவருக்கு பின்னால் தொகுதி மக்கள் நிற்பதும்.. ரசிகர்களுக்கு பவன் கல்யாண் பிறந்த நாளில் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது.

‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் படக்குழுவினர் தொடங்குகிறார்கள்.

இப்படத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கவனிக்க, சண்டை பயிற்சிகளை ராம் -லக்ஷ்மன் அமைக்கிறார்கள்.

பவன் கல்யாண்

Pawan Kalyans Ustaad Bhagat Singh Special Poster

காலம் கடந்தாலும் உயிரோட்ட நடிப்பை கொடுத்தவர்.; சிவாஜி மறைவுக்கு கமல் இரங்கல்

காலம் கடந்தாலும் உயிரோட்ட நடிப்பை கொடுத்தவர்.; சிவாஜி மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ஆர் எஸ் சிவாஜி.

மூன்று வேடங்களில் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவர் பேசிய வசனம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

ஜனகராஜ் உடன் இவர் இணைந்து..”தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க.. என்ற வசனத்தை இவர் பேசுவார். அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வசனமாகும். மேலும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட பல கமல் படங்களில் இவர் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நெல்சனின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார் ஆர் எஸ் சிவாஜி. மேலும் சாய்பல்லவி நடித்து வெளியான ‘கார்கி’ படத்திலும் நாயகியின் தந்தையாக நடித்திருந்தார்.

நேற்று செப்டம்பர் 1 தேதி வெளியான யோகி பாபுவின் ‘லக்கிமேன்’ என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் இன்று செப்டம்பர் 2ம் தேதி உடல்நல குறைவால் காலமானார்.

ஆர் எஸ் சிவாஜி மறைவுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில்…

எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Kamalhassan condolence message for Late Actor RS Sivaji

சாய் பல்லவியின் ரீல் தந்தை சிவாஜி மரணம்.; நடிகர் சங்கம் இரங்கல்

சாய் பல்லவியின் ரீல் தந்தை சிவாஜி மரணம்.; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி.

தன்னுடைய 66 வயதில் இன்று காலை உயிரிழந்தார்.

இவர் மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், கோலமாவு கோகிலா மற்றும் கார்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் முக்கிய வேடங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

(சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கார்கி’ படத்தில் சாய் பல்லவி தந்தையாக நடித்திருந்தார். இவர் தான் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக அறியப்பட்டார்.

அதுபோல ‘கோலமாவு கோகிலா படத்தின் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.)

சின்னத்திரைகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இணையதள தொடரிலும் நடித்து வந்துள்ளார். தன்னுடைய எதார்த்தமான நேர்த்தியான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

நேற்று (01.09.23) மாலை நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் திடீர் என இன்று உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

#தென்னிந்திய நடிகர் சங்கம்
தலைவர் M.நாசர்

நடிகர் சங்கம்

Nadigar Sangam condolence for late Actor RS Sivaji

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.; சன் நெக்ஸ்டில் இல்லையே.?!

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு.; சன் நெக்ஸ்டில் இல்லையே.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது.

உலகளவில் ரூ. 625 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி செப்டம்பர் 7 தேதி ஜெயிலர் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகிறது. பொதுவாகவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும்.

ஆனால் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அந்த படத்தை 21 நாட்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்திருந்தனர். தற்போது ‘ஜெய்லர்’ படம் ரிலீசாகி 28 நாட்களுக்குப் பின்னர் தான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர்

Rajinis Jailer OTT release on 7th September 2023

3வது முறையாக கவுண்டமணியுடன் இணைவது குறித்து முத்துக்காளை மகிழ்ச்சி

3வது முறையாக கவுண்டமணியுடன் இணைவது குறித்து முத்துக்காளை மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் முத்துகாளையை கவுண்டமணி, தாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி டையலாக்கை பேசி, ரசிச்சு, சிரிச்சு, பாராட்டினார்.

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபு நடித்த ‘என் உயிர் நீதானே’, சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த ‘அழகான நாட்கள்’ படத்திற்கு பிறகு 22′ ஆண்டுகள் கழித்து, சாய் ராஜகோபால் இயக்கத்தில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் அரசியல்வாதியான கவுண்டமணிக்கு உதவியாளராக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பில், முத்துக்காளையை தன்னருகே அழைத்து, அனைவரிடமும் ‘என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி டையலாக்கை பேசி, பதில் டையலாக்கை அவரை பேச சொல்லி, ரசிச்சு சிரித்தார். படக்குழுவினர் அனைவரும் அவரோடு சிரித்து, மகிழ்ந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து நடிகர் முத்துக்காளை கூறும் போது…

கவுண்டமணி அண்ணனோடு நான் நடிக்கும் 3வது படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. நான் வளர்ந்து வரும் நேரத்தில் இவரோடு நடித்த ‘என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி தான் எனக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தது.

தற்போது லக்கி, ஷூ கீப்பர் , முனியாண்டியின் முனிப்பாய்ச்சல், பாதகன், கோட்டை முனி, தொடு விரல், அடி ஆத்தி, உதிர், கில்லி மாப்பிள்ளை, ஸ்ரீ சபரி ஐயப்பன், சாஸ்தா, அதையும் தாண்டி புனிதமானது என பல படங்களில் நடித்து வருகிறேன்.

கவுண்டமணி அண்ணனோடு நடித்துவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ எனக்கு பெரும் பேரு வாங்கி தரும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் முத்துக்காளை.

3rd time Muthukalai join hands with Goundamani

RECORD MAKER ‘ஜெயிலர்’ படத்திற்காக ரூ 211.5 கோடியை சம்பளமாக பெற்ற ரஜினி

RECORD MAKER ‘ஜெயிலர்’ படத்திற்காக ரூ 211.5 கோடியை சம்பளமாக பெற்ற ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று வாரங்களுக்கு முன் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பல்வேறு ரெக்கார்டுகளை தமிழ் சினிமாவிலும் தென்னிந்திய சினிமாவிலும் படைத்து வருகிறது.

ரஜினி பட வசூலை குறைவாக காட்ட பலர் சதி வேலைகளில் ஈடுபட்ட வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர் படத்தின் வசூலை முறைப்படியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

உலகளவில் ரூபாய் 625+ கோடிக்கு மேல் ‘ஜெயிலர்’ படம் வசூலித்து வரும் நிலையில் உற்சாகத்தில் உள்ள தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் காஸ்ட்லியான காரை பரிசளித்துள்ளார்.

மேலும் ரஜினிக்கும் வழங்கப்பட்ட காசோலையில் தொகை எவ்வளவு என்பதே பல்வேறு ரசிகர்களின் கேள்வியாக இருந்த நிலையில் இது குறித்த தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே ரஜினிக்கு ரூ 110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் லாபத்தில் ரஜினிகாந்த் பங்கு கேட்டு இருந்தாராம்.

அதன்படி தற்போது ரூ.100 கோடி காசோலை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினிக்கு வழங்கப்பட்ட பி எம் டபிள்யூ எக்ஸ் 7 கார் கிட்டத்தட்ட 1.5 கோடி எனவும் கூறப்படுகிறது.

ஆக மொத்தம் ரூபாய் 211.5 கோடியை ரஜினிகாந்த் சம்பளமாக பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதன்படி ஒரு படத்திற்கு 200 கோடியை சம்பளமாக பெற்ற முதல் இந்திய நடிகர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெறுகிறார்.

ரஜினிகாந்த் படம் மட்டுமல்ல அவரது சம்பளமும் தான் ஒரு ரெக்கார்டு மேக்கர் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளது.

Rajini became the highest paid actor in India

Maran also gave him a profit-sharing cheque worth Rs 100 crore from City Union Bank.

More Articles
Follows