தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொடிய வைரஸ் ஆன கொரோனா உலகமெங்கும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.
இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இங்கே வரும்போது இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் யார் யாரெல்லாம் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பி உள்ளார்களோ அவர்கள்
அனைவரும் இல்லத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு இந்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் கட்சி அலுவலம் வெளியே தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என மாநகராட்சி சார்பில் முதலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்த போட்டோ வைரலாக தொடங்கியது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஆனால் சிறிது நேரத்தில் அந்த நோட்டீசை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்
இது குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளதாவது…
நடிகை கவுதமி சமீபத்தில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பியுள்ள நிலையில் அவரது இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்பது முறை.
அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.
ஆனால், கவுதமி பாஸ்போர்ட்டில், கமலஹாசனின் கட்சி அலுவலகம் முகவரி இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
அதன்பின்னர் கவுதமி வசிக்கவில்லை என்பதால் நோட்டீஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் கிட்டதட்ட்ட 10 வருடங்களாக நடிகர் கமலும் நடிகை கவுதமியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாகவே குடும்பம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா நோட்டீஸ் தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
ஆழ்வார்ப்பேட்டை முகவரியில் தான் தங்கவில்லை என்றும் கட்சியின் அலுவலகம் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா அச்சுறுத்தலால் தன்னை இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Reason behind Corona home quarantine sticker in Kamals house