தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி மற்றும் சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு ஆகிய படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த்.
இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் இவர்.
இவரை இயக்குனராக அடையாளம் கண்டு கொண்டவர்களை விட நடிகராகத்தான் இவரை பலருக்கு தெரியும்.
இயக்குனர் விக்ரமனனின் நிறைய படங்களில் இவரைப் பார்த்திருக்கலாம்.
உன்னை நினைத்து, வானத்தைப் போல உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்த ஆனந்த தொல்லை படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.