தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெ. பேபி பட விமர்சனம்
தொலைந்து போன தன் அம்மாவை தேடிச்செல்லும் இரு மகன்களின் கதை தான் இந்த ஜெ. பேபி.
ஸ்டோரி…
ஊர்வசி (ஜெ. பேபி) இவருக்கு 5 பிள்ளைகள்.. 3 ஆண் மகன்கள்.. இரண்டு 2 பிள்ளைகள். இதில் மூத்தவர் மாறன்.. இளையவன் தினேஷ்.. இவர்கள் முகம் தெரிந்தவர்கள்.. மற்றவர்கள் புதுமுகங்கள்.. இவர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர்.
ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட அண்ணன் தம்பி பிரச்சனையால் மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் ஊர்வசி.
இதனால் பித்து பிடித்தது போல ஊரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் செய்து கொண்டிருக்கிறார். திடீரென மற்ற வீடுகளை பூட்டி வருவது.. போலீசை மிரட்டுவது.. மற்றவர்களுக்கு வீட்டுக்கு வந்த தபால்களை எடுத்து வருவது என பிரச்சனைகளை செய்து கொண்டிருப்பதால் எங்கேயாவது தொலைந்துவிடு என பிள்ளைகள் திட்டுகின்றனர்.
இதனால் ஒரு கட்டத்தில் விரக்தியாகும் ஊர்வசி யாருக்கும் தெரியாமல் திடீரென கொல்கத்தா சென்று விடுகிறார். இதனையடுத்துக் கொல்கத்தாவில் உள்ள காவல்துறை மூலம் தமிழக காவல்துறைக்கு தகவல் வருகிறது.
இதனை எடுத்து மூர்த்தி என்பவர் மூலம் தங்கள் அம்மாவை தேடி கொல்கத்தா செல்கின்றனர் மாறன் & தினேஷ்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
ஊர்வசி – J. Baby
தினேஷ் – Sankar
மாறன் – Senthil
சேகர் நாராயணன் – Sakthi
மெலடி டார்கஸ் – Selvi.
தாட்சாயிணி – Ramani,
இஸ்மத் பானு – Sankar Wife,
சபீதா ராய் – Senthil Wife
மாயா ஸ்ரீ – Sakthi Wife
பேபி கேரக்டரை இதைவிட யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என சவால் விட்டு நடிப்பில் நம்மை மிரள வைத்திருக்கிறார் ஊர்வசி.. அவருக்கே உரித்தான கலகலப்பான பேச்சு எடக்கு முடக்கான செய்கைகள் என நம்மை கவருகிறார்..
ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆகவும் நம்மை அழ வைத்து விடுகிறார்.. குழந்தைகளிடம் ஏதோ ஒன்றை வாங்கி கேட்கும் போது அதற்கு அவரின் பிள்ளைகள் ‘இல்லை..’ என்று சொல்லும்போது நீ குழந்தையா இருக்கும்போது எல்லாத்தையும் வாங்கி கொடுத்தேனே என்று சொல்லும் போது ஒரு தாயின் உணர்வை பிரதிபலிக்கிறார்.
மாறன் & தினேஷ் சண்டையிட்டு பேசிக் கொள்ளாமல் இருக்கும்போது ஒரு தாய் படும் வேதனைகளை கண் முன் நிறுத்துகிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு வேன் ஓட்டும் டிரைவராக தினேஷ். ஒரு யதார்த்தமான நடுத்தர குடும்ப மனிதனை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார். ஊர்வசி செய்த பிரச்சினைகளுக்காக ஒவ்வொருவரிடம் சண்டை போடும்போது மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்..
பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் காமெடி செய்து வந்த மாறனை இதில் படம் முழுக்க அலையவிட்டு காமெடியும் செய்ய வைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.
இரவில் குடித்துவிட்டு உளறுவது பின்னர் காலையில் வேறு மாதிரி பேசுவது என மாறன் தன் பங்கு சிறப்பாக செய்திருக்கிறார்..
ஊர்வசியின் மற்ற பிள்ளைகள் என அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.
இப்படம் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. அவரின் பெரியம்மா பெயர் தான் பேபி. நிஜ வாழ்க்கையில் தொலைந்து போன பேபியை தேட ஒருவர் உதவி செய்து இருக்கிறார்.. அவர்தான் மூர்த்தி அவரை இந்த படத்தில் நடிக்க வைத்து அருமையான ஒரு நல்ல மனிதரை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.
ஊர்வசியின் பேத்தியாக அபி நட்சத்திரா ஒரே காட்சியில் வந்து செல்கிறார்.
டெக்னீசியன்ஸ்…
Producers : Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Sourabh Gupta, Aditi Anand, Ashwini Chaudhari.
Neelam Productions, Neelam Studios, Vistas Media.
இயக்கம் – சுரேஷ் மாரி
இசை – டோனி பிரிட்டோ.
ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்,
எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி,
கலை – ராமு தங்கராஜ்,
பாடல்கள் – கபிலன் உமாதேவி , விவேக்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.. டோனி பிரிட்டோ இசையில் பாடல் வரிகளும் நம் கவனம் பெறுகின்றன..
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் சென்னை அழகும் கொல்கத்தா அழகு ரசிக்க வைக்கிறது.. எடிட்டர் கொஞ்சம் நீளத்தை வெட்டி இருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
பொதுவாக ரஞ்சித் படங்கள் என்றாலே சாதி விஷயம் மேலோங்கி நிற்கும்.. ஆனால் இதில் எதுவும் கலக்காமல் இருப்பது இந்த பேபிக்கு சிறப்பு.
நிஜ வாழ்க்கையை படமாக்கி இருப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் திரைக்கதை அமைத்து எடுத்த இயக்குனர் சுரேஷ் மாரியை பாராட்டலாம்.
நிச்சயம் இந்த படம் மகளிர் தினத்தில் அம்மாக்களுக்கு சமர்ப்பணமாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
J Baby movie review