தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்) அண்ணாமலை-க்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் திறந்து வைத்தார்.
ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், “ரோகினி” திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் அவர்களுடன், கலைப்புலி.S.தாணு, “அபிராமி” ராமநாதன் அருள்பதி, அழகன், K.ராஜன், சக்தி பிலிம் பேக்ட்ரி B.சக்திவேலன், “திருச்சி” மீனாட்சி சுந்தரம், “ராக் போர்ட்” முருகானந்தம், “சேலம்” மனோகரன், ஈஸ்வரன் என திரைத்துறையை சேர்ந்த பலர் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்தனர்.
அவ்விழாவில் பேசிய பலரும் (லேட்) அண்ணாமலை அவர்களுடனான நட்பையும், நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.
“ரோகினி” திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் பேசியதாவது,
அண்ணாமலையின் மறைவு எங்கள் சங்கத்திற்கு மட்டுமல்லாமல், பல திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களின் வாழ்வில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அதை நிரப்ப யார் வருவார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.
அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கும் விதத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். இங்கு வந்து சிறப்பு சேர்த்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி, என்றார்.
அதனைத் தொடர்ந்து (லேட்)திரு.அண்ணாமலை அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார் “அபிராமி” ராமநாதன்.
அப்போது பேசிய “அபிராமி” ராமநாதன்,
இந்த படத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் என் இனத்தவருக்கு வணக்கம். என் இனம் என்றால் திரையுலகம் தான். நாங்கள் பலரையும் மகிழ்வித்திருக்கோம். மேலும் பேசிய அவர், அண்ணாமலை எங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் முன்பு, கண்ணாயிரம் என்பவர் தான் தலைவராக இருந்தார். அவரின் மறைவுக்கு பின், யாரை தலைவராக்குவது என்பது திரு.D.R அவர்களுக்கு குழப்பமாக இருந்தது.
அந்த சமயத்தில், கண்ணாயிரம் அவர்களின் பணி காலம் முடிய 9 மாதங்கள் உள்ளன. அந்த 9 மாதங்கள் மட்டும் நான் தலைவராக இருக்கட்டுமா? என்றார் அண்ணாமலை.
அப்போது, தலைவராக அதவியேற்ற அண்ணாமலையின் நிர்வாகத்தை கண்டு திரு.D.R அவர்கள் மீண்டும் அண்ணாமலையை தலைவராக்கினார். அந்த அளவிற்கு சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடியவர் அண்ணாமலை.
மேலும், ‘பாபா’ படத்தின் தோல்விக்கு ரஜினி நஷ்ட ஈடு கொடுத்தது தான் அனைவருக்கும் தெரியும். அது எப்படி வந்தது என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும்” என்றார்.