தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் மாதவன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ராக்கெட்ரி’.
இந்த ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது
அப்போது மாதவன் பேசியதாவது..
”அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30-வது தடவை, 32-வது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றனர்.
ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.
இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்த பஞ்சாங்கம் மூலம் கணித்து மற்ற கிரகங்களை எல்லாம் தட்டி நேரடியாக அனுப்பினர்.
நம்பி நாராயணின் மருமகன் அருணண் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநராக இருந்தவர்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி கதை : ‘ராக்கெட்ரி’ படமெடுக்க மாதவன் பட்ட ரணங்கள்
அவர், பஞ்சாங்க முறை வானியல் வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பினார்.
அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது. சின்ன பட்ஜெட்டில் செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் இந்த பஞ்சாங்கம் தான்” என பேசினார் மாதவன்.
மாதவனின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பொருளானது.
ஒரு சிலர் மாதவனுக்கு ஆதரவாக பேசினாலும் பலர் மாதவனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். பஞ்சாங்கம் வேறு விஞ்ஞானம் வேறு என ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிலையில் நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில்… “அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இதற்கெல்லாம் (விமர்சனங்களுக்கு) தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன்.
அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது.
அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்.” என பதிவிட்டுள்ளார்.
Madhavan controversy speech at Rocketry press meet