தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விசாரணை படத்திற்கு பிறகு மீண்டும் தினேஷ் மற்றும் ஆனந்தி நடித்துள்ள படம் இது. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை ரஞ்சித் இயக்க, அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.
கதைக்களம்..
படத்தின் ஆரம்பக் காட்சியில் 2ஆம் உலக போரின்போது வெடிக்காமல் இருந்த ஒரு சக்தி வாய்ந்த அணு குண்டு ஒன்று மாமல்லபுர கடற்கரை ஓரத்தில் ஒதுங்குகிறது.
உடனே இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் பரவுகிறது.
இதனையறிந்த போலீஸ் தங்கள் கன்ட்ரோலுக்கு அந்த குண்டை எடுத்து காவல் நிலைய வளாகத்தில் வைக்கின்றனர். இதனை ஒரு திருடன் எடுத்து கொண்டு காயிலான் கடையில் போட்டு பணம் வாங்கி செல்கின்றார்.
அங்கிருக்கும் பழைய இரும்பு பொருட்களுடன் அந்த அணு குண்டையும் எடுத்துக் கொண்டு மற்றொரு ஊருக்கு செல்கிறார் லாரி டிரைவர் தினேஷ்.
இந்த குண்டை தேடி போலீஸ் உதவியுடன் ஒரு ஊழல் கும்பல் வருகிறது. இது மீடியாக்களில் சிக்கினால் பெரும் பிரச்சினையாகிவிடும் என்பதாலும் போலீஸ் தேடி அலைகிறது.
‘இதனிடையில் சமூக ஆர்வலரும் பிரபல பத்திரிகையாளருமான ரித்விகாவும் இதை தேடி வருகிறார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு தான் இந்த குண்டு பற்றி அறிகிறார் தினேஷ். அதன்பின்னர் என்ன செய்தார்? அந்த குண்டை யாரிடம் ஒப்படைத்தார்? அந்த குண்டு வெடிக்காமல் இருந்ததா? ஒரு கும்பல் குண்டை தேடி அலையும் க்கம் என்ன? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
அட்டக்கத்தி, விசாரணை ஆகிய படங்களுக்கு பிறகு இதில் நடிப்பின் உச்சம் தொட்டு இருக்கிறார் தினேஷ். ஒரு லாரி டிரைவராக இருந்தாலும் தன் தொழில் மீது அவர் காட்டும் அக்கறை சூப்பர். கயிலான் கடை லாரி டிரைவர் செல்வமாக வாழ்ந்திருக்கிறார்.
சித்ரா என்ற டீச்சர் கேரக்டரில் கயல் ஆனந்தி. கயல் படத்திற்கு பிறகு அவரை குண்டு ஆனந்தி என்றே சொல்லலாம். ஆனால் அம்மணி இன்னும் ஸ்லிம்மாக தான் இருக்கிறார்.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படத்திற்கு அருமையான நடிப்பை கொடுத்துள்ளார் முனிஷ்காந்த். அப்பாவித்தனமாக அவர் குண்டு மீது தண்ணி ஊற்றி நமத்துபோக வைப்பது சிரிப்பை நிச்சயம் வரவழைக்கும்.
நம்ம நாட்டு குண்டு நம்மளை கொல்லாது? என இவர் கேட்கும் காட்சிகள் செம.
ஜான்விஜய், லிஜேஷ், ரித்விகா கேரக்டர்கள் நிச்சயம் பேசப்படும்.
இவர்களுடன் ரமா, மாரிமுத்து, ரமேஷ் திலக், மெட்ராஸ் ஜானி, சூப்பர் குட் சுப்ரமணி, போலீஸ் லிஜேஷ் என பலரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
டென்மாவின் இசையில் பின்னணி இசை மிரட்டல். பாடல்களும் கேட்கும் ரகம் தான். கூத்து பாடல்கள் நிறைய உள்ளன.
கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு சூப்பர். காயிலான் கடைகள் கூட அழகான அழுக்காக தெரிகிறது.
வெறுமனே காயிலான் கடையாக இல்லாமல்.. அதை கொண்டு சென்று இறுதியில் நல்ல கருத்தை சொன்ன அதியன் ஆதியரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
வசனங்கள் படத்திற்கு பலம்… மனுசனா அடுத்த உயிரோட வலியை புரிஞ்சிக்கனும். தனக்கு வந்தா உணர்வேனா என்ன அர்த்தம் என ரித்விகா கேட்கும் போது நிச்சயம் கைதட்டுவீர்கள்.
இடைவேளையில் குண்டு முக்கியமா? இல்லை காதலி முக்கியமா? என தினேஷ் வைத்து ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளார் டைரக்டர்.
வெடிக்காத குண்டுகளாலும் எப்படி ஆபத்து வருகிறது.? என்பதையும் குண்டு வெடித்தால் எந்த மாதிரியான அழிவுகள் வரும என்பதையும் சூப்பராக காட்டியுள்ளனர்.
அதிலும் குண்டு வெடித்து விடுமா? என நமக்கே மன உளைச்சலை கொடுத்துள்ளனர்.
கிளைமேக்ஸில் குரோசிமா நாட்டு அழிவு பற்றி பேசுவது நம் இதயத்தை கூட அழ வைக்னகும்.
டூயட் பாடல்களை குறைத்திருக்கலாம்.