தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி.
இந்த இரு படங்களும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக். 25ல் வெளியாகிறது.
இரண்டும் பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் அதிகாலை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. காலை காட்சிகள் 8 மணிக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. மீறி சிறப்புக் காட்சிகள் இருந்தால் அந்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.
முன்பதிவு கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்து இருந்தார்.
இதனால் இரண்டு பட அதிபர்களும் தமிழக அரசிடம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் நாளை வெளியாகும் பிகில் & கைதி ஆகிய படங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சிறப்புக் காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி விடுமுறை தினங்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி என ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
TN Govt granted permission to screen Special show of Bigil and Kaithi