தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்ற செய்தி வந்தவுடனே அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்த்து.
ஆனால் நாள் ஆக ஆக அதன் மீதான எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது.
காரணம் படத்தின் தகவல்கள் சரியாக வரவில்லை. மேலும் சூட்டிங்கையும் சில மாதங்கள் நிறுத்தி வைத்தனர்.
இதனிடையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார் சூர்யா.
தற்போது மீண்டும் என்ஜிகே சூட்டிங்கை தொடங்கியுள்ளார் செல்வராகவன்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் கொச்சி அருகேயுள்ள மட்டாஞ்சேரி பகுதியில் நடைபெற்று வருகிறது.
சூர்யா மற்றும் ரகுல் பிரீத் சிங் நடிக்கும் ஒரு பாடலை இங்கே படமாக்குகிறார்களாம்.
மற்றொரு நாயகியாக சாய்பல்லவி நடிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Suriyas NGK movie last shoot schedule happening at Kerala