தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
பரத் கோகுல் ஆனந்து இருவரும் கொடைக்கானலில் டீ பேக்டரி நடத்தி வருகின்றனர்.
பரத் மிகப்பொறுப்பாக இருக்கிறார். பரத்திற்கு அழகான மனைவி அபர்ணா. பரத்தின் உறவுக்காரர் தர்மராஜ். இவரின் பையன் அருவி பாலா. தன் பையனை பரத் டீ பேக்டரியில் வேலைக்கு சேர்த்து விடுகிறார்.
ஆனால் பரத்தின் பார்ட்னர் கோகுல் ஆனந்த் கம்பெனியிலேயே குடிக்கும் ஒரு பெண் பித்தர். திருமணமாகாதவர்.
அருவி பாலா ஒரு முறை பரத் இல்லாத வீட்டில் அந்த வீட்டில் நடக்கும் ஒரு திரைமறைவு ரகசியத்தை பார்த்துவிடுகிறார். இதை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
அப்போது இவரது நண்பர்களுடன் இணைந்து வெளியில் செல்லும்போது போலீசில் மாட்டிக் கொள்கிறார். ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிக்க போலீஸ் 10 லட்சம் கேட்கிறார்.
அருவி பாலா என்ன செய்தார்? அவர் என்ன விஷயம் பார்த்தார்? பரத்திடம் சொன்னாரா? பரத் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
இதுவரை பார்க்காத பாத்திரத்தில் பரத். அமைதியான அப்பா, பொறுப்பான கணவன், நேர்மையான முதலாளி என பன்முகம் காட்டியிருக்கிறார்.
பிசினஸ் பார்ட்னர் பொறுப்பில்லை என்றாலும் சகித்துக் கொள்ளும் காட்சிகளில் தொழில் நேர்த்தி தெரிகிறது.
பரத்தின் நண்பனாக பார்ட்னராக கோகுல் ஆனந்த். இவரின் பார்வையில் ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் இரண்டும் கலந்திருக்கிறது.
அபர்ணாவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் குறைவு. க்ளோசப் காட்சிகள் கூட சரியாக இல்லை. கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.
அருவி பாலாவின் தந்தை தர்மராஜ் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். முழுவேடம் கொடுத்தால் கலக்குவார்.
அருவி பாலா சுற்றியை கதை நடக்கிறது. அவரும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா, தசராதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜ், ஆராத்யா ஶ்ரீ ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.
டெக்னீஷியன்கள்..
இது த்ரில்லர் கலந்து எமோஷனல் படம் எனலாம். அதற்கேற்ப பின்னணி இசையை கொடுத்திருந்தால் இன்னும் பயம் தொற்றிக் கொள்ளும் ரசிகர்களுக்கு. இசையமைப்பாளர் தரண் குமாரிடம் அது மிஸ்ஸிங்.
ஒளிப்பதிவாளர் யுவா தன் பணியில் சிறப்பு. இரவு காட்சியிலும் பேக்டரி பகல் காட்சியிலும் தன் பணிக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
படத்தின் க்ளைமாக்ஸை நாம் யூகித்தாலும் அதன் வேகத்தை இன்னும் கூட்டியிருந்தால் ரசிகர்களின் நாடி துடிப்பு எகியிறுக்கும்.
இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் பலரும் தங்கள் உண்மை முகங்களை சமூகத்தில் காட்டிக் கொள்வதில்லை. அது உடன் படுக்கும் மனைவியாக இருந்தாலும் உடன் பழகும் நண்பனாக இருந்தாலும்.
எனவே சில நேரங்களில் நாம் யதார்த்த வாழ்க்கை வாழாமல் செயற்கையாகவே வாழ்கிறோம்.
எவரையும் முழுமையாக நம்ப வேண்டாம். என்பதையும் இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
முகமூடிக்கு பின்னாடி ஒரு முகம் இருக்கிறது. அதுதான் மனிதர்களின் உண்மையான முகம் என்பதை தெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஷாரங்.
நடுவன் தயாரிப்பு – கியூ என்டர்டெயின்மென்ட்
ஆக நடுவன்… யாரைத்தான் நம்புவதோ?
Naduvan movie review and rating in Tamil