தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விஷ்ணு விஷால், பார்த்திபன், ஹரீஷ் உத்தமன், ஸ்ரீதிவ்யா, சூரி, காசி விஸ்வநாதன் மற்றும் பலர்.
இயக்கம் : சுசீந்திரன்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : சூர்யா ஏ.ஆர்
எடிட்டிங்: காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : நல்லுசாமி பிக்சர்ஸ் – தாய் சரவணன், ராஜீவன்
கதைக்களம்…
1980களில் நடக்கும் ஜாதி, தீண்டாமை பிரச்சினையே இந்த கதைக்களம்.
கீழ் ஜாதியை சார்ந்த கிட்டு (விஷ்ணு) +2 தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருகிறார்.
அவரை மேலும் படிக்க வைத்து, மாவட்ட கலெக்டராக்கி ஊரில் இருக்கும் ஜாதி பிரச்சினையை ஒழிக்க நினைக்கிறார் ஊர் பெரியவர் சின்ராசு (பார்த்திபன்).
ஆனால் இதனை முறிடியக்க மேல் சாதி வகுப்பினர், போலீஸ் ஹரீஷ் உத்தமனின் உதவியுடன் பல திட்டங்களை போடுகின்றனர்.
அதன்படி, விசாரணை பெயரில் விஷ்ணுவை கைது செய்ய, பின்னர் ஜாமீன், பின்னர் விசாரணை என நடக்கிறது.
ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு வராமல் மாயமாகிறார் விஷ்ணு.
இதனால் பார்த்திபனுடன் இணைந்து ஊர் போராட்டம் நடத்த மாநில அளவில் பெரும் பிரச்சினையாக என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
கதாபாத்திரங்கள்…
கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கேரக்டரில் நன்றாகவே பொருந்தியுள்ளார் விஷ்ணு.
தன் சகமாணவி உயிரை காப்பாற்ற மாணவர்கள் செய்யும் அந்த கட்டில் சேஸிங் காட்சி ரசிக்க வைக்கிறது.
தன் இனத்துக்காக இவர் கடைசி வரை போராடினாலும் கோபம், கொந்தளிப்பு என இல்லாமல் வெறுமனே இருப்பது உறுத்தல்.
பார்த்திபன் அப்படியிருந்தால், அது அவரின் வயதுக்றேக்க பக்குவம் என்று கூறலாம். கிட்டு கொஞ்சம் கில்லியாகி இருக்கலாமே.
ரெகுலர் பார்முலாவை விட்டு, வேறு ரூட்டிலும் அசத்துகிறார் பார்த்திபன்.
பொருத்தமான கிராமத்து முகம் ஸ்ரீதிவ்யா. துளி கூட கவர்ச்சியில்லாமல் முழுக்க மறைத்து முக அழகில் கவருகிறார்.
கம்பீர போலீசாக ஹரீஷ் ரசிக்க வைக்கிறார். எல்லாரும் அந்த காலக்கட்டத்தில் இருக்க இவர் மட்டும் தனியாக தெரிகிறார்.
இவர்களுடன் சூரி இருந்தும் அவர் பெயரை தவிர சொல்ல ஒன்றுமில்லை.
கௌரவக்கொலை செய்யும் சூப்பர்குட் சுப்ரமணி அந்த ஒரு காட்சியிலே அசல்ட்டாக அசத்துகிறார்.
படத்தின் ப்ளஸ்…
- சாதிப் பிரச்சினையும் அது படமாக்கப்பட்ட விதமும்
- நக்கல் நையாண்டி இல்லாத மெச்சூர் பார்த்திபன்
- ஸ்ரீதிவ்யாவும் அழகான கிராமத்து பெண்களும்
படத்தின் மைனஸ்….
- ஆமை வேக திரைக்கதை. கிட்டு காணாமல் போன பிறகு ரொம்பவே இழுத்தடித்து விட்டார்கள்.
- பல படங்கள் ஓட காரணமாக இருக்கும் சூரியின் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் வேஸ்ட் செய்திருக்கிறார் சுசீந்திரன்.
பாடலாசிரியர் யுகபாரதியின் வசனங்கள் நச்…
- சோத்துக்கு இல்லாதவனெல்லாம் சோசியலிஸம் பேசுறானுங்க” “ஓட்டுப்போடுறதைத் தவிர நமக்கென்ன உரிமை இருக்கு.
- விட்டுகிட்டேதான் இருக்கோம், அவங்க எப்போ கொடுப்பாங்கனு தெரியலை”
- அடிச்சிட்டே இருப்பான், திருப்பி அடிச்சா திமிருனு சொல்லுறான்”
உள்ளிட்ட பல வசனங்கள் அப்ளாஸை அள்ளும்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இமானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு பலம். இளந்தாரி பொண்ணு பாடல் இதமாக இதயத்தை வருடும்.
அதற்காக தேவையில்லாமல் க்ளைமாக்ஸ் சமயத்தில் இரண்டு டூயட் பாடல்கள் தேவையா?
ஊர் பிரச்சினை ஹைவேயில் செல்ல, விஷ்ணு ஸ்ரீதிவ்யாவுடன் இரண்டு டூயட் பாடுவது ரொம்பவே ஓவர்.
ஒளிப்பதிவாளரும் கலை இயக்குனரும் 30 வருடங்களுக்கு முந்தைய அனைத்தையும் கண் முன்னே கொண்டு வந்திருப்பது சிறப்பு.
இயக்குனர் சுசீந்திரன், ஜாதி பிரச்சினையை கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
படிப்பறிவு, கௌரவக்கொலை, ஆதிக்க சாதி சூழ்ச்சி என அனைத்தையும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.
ஆனால் அண்மைகாலமாக இதுபோன்ற படங்கள் அதிகம் வருவது எதனால்? என்பதுதான் புரியவில்லை.
மொத்தத்தில் மாவீரன் கிட்டு… ரசிகர்களுக்கு கிப்ட்டு