தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
தன்னுடைய கனவில் தான் கண்ட பெண்ணை வரைந்து அதே போன்ற பெண்ணை கண்டுபிடித்து அவளுடன் செக்ஸ் கொள்ளும் எண்ணம் கொண்டவர் கோடீஸ்வர வில்லன் தருண் அரோரா.
அப்படி வரைந்த (ரித்திகா சென்) படத்தை இந்தியாவில் உள்ள தாதாக்களுக்கு அனுப்பி அவளை கண்டுபிடிக்க சொல்கிறார்.
கண்டுபிடித்து வந்தால் ரூ. 10 கோடி தருவதாக கட்டளையிடுகிறார்.
அந்த புராஜக்ட் ராதாரவிக்கு வர, அவரின் கீழ் வேலை பார்க்கும் சந்தானம் அந்த பெண்ணை ஒரு முறை எங்கேயோ பார்த்துள்ளதாக கூறி அவளை தேடி செல்கிறார்.
அதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை
கேரக்டர்கள்…
ஆக்சன் மற்றும் நடனத்தில் சந்தானம் மணக்கிறார். ஈகோ பார்க்காமல் யோகிபாபு உடன் அமைத்துள்ள கூட்டணி சிறப்பு.
ஆனால் சந்தானம் அண்ட் யோகிபாபு கூட்டணி என்றவுடனே காமெடி களை கட்டும் என்று பார்த்தால் அதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் ஓகே.
ஆனால் தில்லுக்கு துட்டு 2, ஏ1 என பட்டைய கிளப்பிய சந்தானம் இதில் கொஞ்சம் டல்லாக இருக்கிறார்.
சந்தானம் யோகிபாபுவை கலாய்த்தால் இவரும் அவரையும் கலாய்க்கிறார்.
ஜாதியற்ற ஜனங்களாவோம்… நாடோடிகள் 2 விமர்சனம் 4/5
நாயகி ரித்திகா சென் அழகாக இருக்கிறார். தாவணி உடையில் கவர்ச்சியிலும் கலக்கல். ஆனால் ஒரே உடையில் இவரை காட்டுவது போரடிக்கிறது. இவரை ஒரு லூசு டைரக்டர் போல காட்டியுள்ளனர். எதை சொன்னாலும் அப்பாவி போல நம்புவது ஓவர் தான்.
மற்றபடி சந்தானபாரதி, நமோ நாராயணா, ரேகா உள்ளிட்டோர் இருந்தாலும் பெரிதாக வாய்ப்பில்லை. பிரம்மானந்தம் பிரமாதம். அசத்தல்.
தீபக்குமார் பாரதியின் ஒளிப்பதிவு கலர்புல். ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து.
விஜய நாராயணின் இசையில் பாடல்கள் கவரவில்லை. பின்னணி இசை கை கொடுத்துள்ளது.
வில்லன் ஓவியம் வரைவாராம். அந்த பெண்ணை அழைத்து வர வேண்டுமாம். இது எல்லாம் ரொம்ப ஓவர்ப்பா.
டைரக்டர் விஜய் ஆனந்த் கதையில் கொஞ்சம் கவனம் செலுத்திருயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Dagalty review rating