தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விஷால், பிரசன்னா, வினய், பாக்யராஜ், சிம்ரன், அனுஇமானுவேல், ஜான்விஜய், ஆண்ட்ரியா, தலைவாசல் விஜய், ரவிமரியா, அஜய்ரத்னம், ஜெயபிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : மிஷ்கின்
இசை : அரோல் கரோலி
ஒளிப்பதிவு: கார்த்திக்
எடிட்டர்: அருண்குமரன்
கலை: அமரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : விஷால் பிலிம் பேக்டரி
கதைக்களம்…
விஷால் ஒரு தனியார் துப்பறிவாளர். இவரின் உதவியாளர் நண்பர் பிரசன்னா.
காவல்துறையாலே கண்டுபிடிக்க முடியாத அனைத்தையும் அசால்ட்டாக கண்டுபிடிப்பார்.
ஒருமுறை ஒரு சிறுவன் தன் வீட்டு நாய் இறந்துவிட்டது, அதை ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டான். அதனை கண்டுபிடித்து தர கேட்கிறார்.
அந்த சிறுவனின் நல்ல உள்ளத்துக்கு உதவ நினைக்கும், விஷால் அந்த புராஜக்ட்டை கையில் எடுக்கிறார்.
இதனிடையில் சிம்ரனின் கணவர் மின்னல் தாக்கி இறக்கிறார்.
அந்த நாய் கொலையில் துப்பு துலக்கும்போது, அதனுள் இந்த கொலைக்கான சிறுதுரும்பு கிடைக்கிறது.
இந்த இரண்டுக்கும் என்ன கனெக்ஷன் என உள்ளே நுழையும் டிடெக்டிவ் விஷால், அதன் பின்னால் இருக்கும் ஒரு பெரிய நெட்வொர்க்கை கண்டுபிடிக்கிறார்.
இதை ட்விஸ்ட்டுகள் தன் பாணியில் நிதானமாக கையாண்டு, விருந்து படைத்திருக்கிறார் மிஷ்கின்.
இது விஷால் படம் என்பதை விட மிஷ்கின் படம் என்றே சொல்லாம். அவன் இவன் படத்தில் பாலாவின் நடிகராக மாறிய விஷால், இதில் மிஷ்கினின் நாயகனாக மாறிவிட்டார்.
தொப்பி,கண்ணாடி ஆகியவற்றை மீறி, பேசும் பேச்சு, திடீரென ஓடும் ஓட்டம், நாயகியுடன் பேசும் தோரணை என விஷால் விளாசியிருக்கிறார்.
படத்தில் நாயகி கேரக்டர் தேவையில்லை என்றாலும் இவர் இறக்கும் தருவாயில் நம்மை கவர்கிறார் அனுஇமானுவேல்.
சீரியஸ் படத்தில் கொஞ்சம் கலகலப்பூட்டி நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார் பிரசன்னா. க்ளைமாக்ஸில் தன் கேரக்டரை பிரகாசிக்க செய்கிறார் பிரசன்னா.
இதுவரை பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் வினய். விஷால் இவரை நெருங்க, நெருங்க ஒவ்வொரு தடயத்தை அழிப்பதில் அசத்துகிறார்.
க்ளைமாக்ஸில் விஷாலுடன் மோதும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
அழகில் மட்டுமல்ல ஆக்சனிலும் அசத்துவேன் என அடம்பிடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
சபலகேஸ் ஜான்விஜய் ஆண்ட்ரியா மீது ஆசைப்பட்டு உயிர்விடும் காட்சி நச்.
இவர்களுடன் ரவிமரியா, தலைவாசல் விஜய், மோகமுள் அபிசேக் உள்ளிட்டோரும் கச்சிதம்.
சிம்ரன், ஜெயப்பிரகாஷ், அஜய்ரத்னம் கேரக்டர்கள் வலுவில்லை. ஆனால் படத்தின் கதையோட்டத்திற்கு தேவைப்பட்டுள்ளது எனலாம்.
பாக்யராஜ் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். இயக்கியிருக்கிறார். அவரது சினிமா கேரியரில் இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருக்கமாட்டார். அவர் இறக்கும்போது தம் (படுத்த படுக்கையாக இருக்கும்) மனைவிக்கு யாருமில்லை என அவரையும் சேர்த்துக் கொல்வது செம டச்சிங்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இயக்குனர் மிஷ்கின், நடிகர் விஷால், ஒளிப்பதிவாளர் கார்த்திக். இசையமைப்பாளர் அரோல்கரோலி இவர்கள் நால்வரையும் இப்படத்தின் பில்லர்கள் என்றே சொல்லலாம்.
சண்டைக் காட்சிகள் தெறி என்றால், எமோஷனல் காட்சிகளில் நம்மை உருகவைக்கிறார் இசையமைப்பாளர் அரோல் கரோலி.
கலை இயக்குனரும் எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம் பற்றிய அலசல்…
மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மிஷ்கின் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.
ஒவ்வொரு டைரக்டருக்கும் ஒரு மேக்கிங் ஸ்டைல் இருக்கும். இது மிஷ்கின் ஸ்டைல் என ஒவ்வொரு ப்ரேமிலும் சொல்லியிருக்கிறார்.
படைப்பாளிகளுக்கு பெயர் சொல்லும் படங்கள் கொஞ்சமே இருக்கும். அதில் இந்த படம் நிச்சயம் இடம்பெறும்.
விஷாலிடம் ஒருவர் வருகிறார் என்றால், அவரின் பிரச்சினையை முன்கூட்டியே விஷாலே சொல்வது எல்லாம் ஓவர்.
பிரசன்னா காஸ்ட்டியூம் போல விஷால் காஷ்ட்யூமிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலும் விஷால் கண்ணாடி அணிந்திருப்பதால் கண் ரியாக்சன் தெரியவில்லை.
படத்தின் முதல்காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை பார்த்தால் மட்டுமே படம் புரியும் என்பது எங்களது வேண்டுகோள்.
விஷாலிடம் வரும் சிறுவன் கொலைக்காரனிடம் அந்த நாயை எப்படி கொல்ல மனசு வந்துச்சி? என கேட்க நினைக்கிறார். ஆனால் க்ளைமாக்ஸில் வில்லனிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்கிறார். இயக்குனர் கவனிக்கலையா?
துப்பறிவாளன்… மிரட்டல் டிடெக்டிவ்