துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷால், பிரசன்னா, வினய், பாக்யராஜ், சிம்ரன், அனுஇமானுவேல், ஜான்விஜய், ஆண்ட்ரியா, தலைவாசல் விஜய், ரவிமரியா, அஜய்ரத்னம், ஜெயபிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : மிஷ்கின்
இசை : அரோல் கரோலி
ஒளிப்பதிவு: கார்த்திக்
எடிட்டர்: அருண்குமரன்
கலை: அமரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : விஷால் பிலிம் பேக்டரி
vishal cap

கதைக்களம்…

விஷால் ஒரு தனியார் துப்பறிவாளர். இவரின் உதவியாளர் நண்பர் பிரசன்னா.

காவல்துறையாலே கண்டுபிடிக்க முடியாத அனைத்தையும் அசால்ட்டாக கண்டுபிடிப்பார்.

ஒருமுறை ஒரு சிறுவன் தன் வீட்டு நாய் இறந்துவிட்டது, அதை ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டான். அதனை கண்டுபிடித்து தர கேட்கிறார்.

அந்த சிறுவனின் நல்ல உள்ளத்துக்கு உதவ நினைக்கும், விஷால் அந்த புராஜக்ட்டை கையில் எடுக்கிறார்.

இதனிடையில் சிம்ரனின் கணவர் மின்னல் தாக்கி இறக்கிறார்.

அந்த நாய் கொலையில் துப்பு துலக்கும்போது, அதனுள் இந்த கொலைக்கான சிறுதுரும்பு கிடைக்கிறது.

இந்த இரண்டுக்கும் என்ன கனெக்ஷன் என உள்ளே நுழையும் டிடெக்டிவ் விஷால், அதன் பின்னால் இருக்கும் ஒரு பெரிய நெட்வொர்க்கை கண்டுபிடிக்கிறார்.

இதை ட்விஸ்ட்டுகள் தன் பாணியில் நிதானமாக கையாண்டு, விருந்து படைத்திருக்கிறார் மிஷ்கின்.

vishal anu
கேரக்டர்கள்…

இது விஷால் படம் என்பதை விட மிஷ்கின் படம் என்றே சொல்லாம். அவன் இவன் படத்தில் பாலாவின் நடிகராக மாறிய விஷால், இதில் மிஷ்கினின் நாயகனாக மாறிவிட்டார்.

தொப்பி,கண்ணாடி ஆகியவற்றை மீறி, பேசும் பேச்சு, திடீரென ஓடும் ஓட்டம், நாயகியுடன் பேசும் தோரணை என விஷால் விளாசியிருக்கிறார்.

படத்தில் நாயகி கேரக்டர் தேவையில்லை என்றாலும் இவர் இறக்கும் தருவாயில் நம்மை கவர்கிறார் அனுஇமானுவேல்.

சீரியஸ் படத்தில் கொஞ்சம் கலகலப்பூட்டி நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார் பிரசன்னா. க்ளைமாக்ஸில் தன் கேரக்டரை பிரகாசிக்க செய்கிறார் பிரசன்னா.

இதுவரை பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் வினய். விஷால் இவரை நெருங்க, நெருங்க ஒவ்வொரு தடயத்தை அழிப்பதில் அசத்துகிறார்.

க்ளைமாக்ஸில் விஷாலுடன் மோதும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

அழகில் மட்டுமல்ல ஆக்சனிலும் அசத்துவேன் என அடம்பிடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.

thupparivalan prasanna

சபலகேஸ் ஜான்விஜய் ஆண்ட்ரியா மீது ஆசைப்பட்டு உயிர்விடும் காட்சி நச்.

இவர்களுடன் ரவிமரியா, தலைவாசல் விஜய், மோகமுள் அபிசேக் உள்ளிட்டோரும் கச்சிதம்.

சிம்ரன், ஜெயப்பிரகாஷ், அஜய்ரத்னம் கேரக்டர்கள் வலுவில்லை. ஆனால் படத்தின் கதையோட்டத்திற்கு தேவைப்பட்டுள்ளது எனலாம்.

பாக்யராஜ் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். இயக்கியிருக்கிறார். அவரது சினிமா கேரியரில் இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருக்கமாட்டார். அவர் இறக்கும்போது தம் (படுத்த படுக்கையாக இருக்கும்) மனைவிக்கு யாருமில்லை என அவரையும் சேர்த்துக் கொல்வது செம டச்சிங்.

thupparivalan stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இயக்குனர் மிஷ்கின், நடிகர் விஷால், ஒளிப்பதிவாளர் கார்த்திக். இசையமைப்பாளர் அரோல்கரோலி இவர்கள் நால்வரையும் இப்படத்தின் பில்லர்கள் என்றே சொல்லலாம்.

சண்டைக் காட்சிகள் தெறி என்றால், எமோஷனல் காட்சிகளில் நம்மை உருகவைக்கிறார் இசையமைப்பாளர் அரோல் கரோலி.

கலை இயக்குனரும் எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

இயக்கம் பற்றிய அலசல்…

மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மிஷ்கின் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

ஒவ்வொரு டைரக்டருக்கும் ஒரு மேக்கிங் ஸ்டைல் இருக்கும். இது மிஷ்கின் ஸ்டைல் என ஒவ்வொரு ப்ரேமிலும் சொல்லியிருக்கிறார்.

படைப்பாளிகளுக்கு பெயர் சொல்லும் படங்கள் கொஞ்சமே இருக்கும். அதில் இந்த படம் நிச்சயம் இடம்பெறும்.

விஷாலிடம் ஒருவர் வருகிறார் என்றால், அவரின் பிரச்சினையை முன்கூட்டியே விஷாலே சொல்வது எல்லாம் ஓவர்.

பிரசன்னா காஸ்ட்டியூம் போல விஷால் காஷ்ட்யூமிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலும் விஷால் கண்ணாடி அணிந்திருப்பதால் கண் ரியாக்சன் தெரியவில்லை.

படத்தின் முதல்காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை பார்த்தால் மட்டுமே படம் புரியும் என்பது எங்களது வேண்டுகோள்.

விஷாலிடம் வரும் சிறுவன் கொலைக்காரனிடம் அந்த நாயை எப்படி கொல்ல மனசு வந்துச்சி? என கேட்க நினைக்கிறார். ஆனால் க்ளைமாக்ஸில் வில்லனிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்கிறார். இயக்குனர் கவனிக்கலையா?

துப்பறிவாளன்… மிரட்டல் டிடெக்டிவ்

நெருப்புடா விமர்சனம்

நெருப்புடா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விக்ரம்பிரபு, நிக்கிகல்ராணி, பொன்வண்ணன், மதுசூதனன் ராவ், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சங்கீதா, வருண், ராஜசிம்மன், ராஜ்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : அசோக்குமார்
இசை : ஷான்ரோல்டன்
ஒளிப்பதிவு: ஆர்டி. ராஜசேகர்
எடிட்டர்: தியாகு
கலை: பிரபாகரன்
பி.ஆர்.ஓ. : டைமண்ட் பாபு
தயாரிப்பு : விக்ரம்பிரபு, இசக்கிதுரை, அஜய்குமார்

கதைக்களம்…

போலீஸ் கேரக்டர்களை பல படங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் தீ அணைப்பு வீரர்களை மையமாக கொண்ட படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

தீயை பார்த்தால் நாம் விலகி பயந்து ஓடுவோம். ஆனால் தீயணைப்பு வீரர்கள் மட்டுமே தீயை நோக்கி ஓடுவார்கள். அப்படி ஒரு கதைக்களத்தை எடுத்து அதை அனல் பறக்க சொல்லியிருக்கிறார்கள்.

தீயணைப்பு வீரராக வேண்டும் என சிறுவயது முதலே ஆசைக் கொண்டவர் விக்ரம்பிரபு. இவரைப்போல 4 நண்பர்கள் இருக்கிறார்கள்.

அதன்படி தாங்கள் வைத்திருக்கும் தீயணைப்பு வண்டியை வைத்துக் கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அரசாங்க வேலைகிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் விக்ரம்பிரபுவின் நண்பர் தற்செயலாக ஒருவரை தள்ளிவிட அவர் மரணமடைகிறார்.

இதனால் அவர்கள் வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை எப்படி கையாள்கிறார்கள்? என்பதே இந்த நெருப்புடா.

கேரக்டர்கள்…

வாகா, வீரசிவாஜி பட தோல்விகளால் துவண்டு போயிருந்த விக்ரம்பிரபுவுக்கு இந்த நெருப்புடா படம் புதிய தெம்பை கொடுக்கும்.

அவரின் உயரம், அவரின் பாடிலேங்ஜ்வுக்கு ஏற்ற கதைக்களத்தை செலக்ட் செய்து அதில் சிக்ஸர் அடிக்கிறார்.

நிக்கி கல்ராணிக்கு அவ்வளவு காட்சிகளில் இல்லையென்றாலும், கிடைக்கும் கேப்பில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விக்ரம்பிரபுவின் நண்பர்களாக வருபவர்கள் நல்ல தேர்வு.

மொட்டை ராஜேந்திரன் தன் காமெடி ரூட்டை மாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது. அதுவும் முகத்தை அடிக்கடி க்ளோசப்பில் காட்டுவதை தவிர்த்தியிருக்கலாம்.

மிரட்டல் வில்லனாக மதுசூதனன் மகுடம் சூடுகிறார்.

க்ளைமாக்ஸில் எவரும் எதிர்பாராத சவாலான கேரக்டரில் வரும் சங்கீதா தன் முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஷான் ரோல்டான் இசையில் ஆலங்கிளியே, அந்தப் பொண்னு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால் ஆலங்கிளி பாடல் பாடிய பாடகருக்கு ஹைபீச் எடுக்கவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு உயிரே என்ற வார்த்தைகளை பாடும்போது காட்டுகிறது.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. தீயை அணைக்கும் காட்சிகளில் அந்த வீரர்கள் மீதான மதிப்பை கூட்டுகிறது.

கலை இயக்குனரின் கைவண்ணத்தில் காட்சிகள் அருமை. ஒரு குப்பம் பகுதியாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி தந்திருக்கிறார்.

இயக்குனர் அசோக்குமார் புதிய களத்தை தேர்ந்தெடுத்து அதில் விளையாடியிருக்கிறார். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து அதை கையாண்ட விதமும் அருமை.

ஆனால் மதுசூதனன் இறக்கும் காட்சியில் அவரின் சட்டை முழுவதும் ரத்தக்கரை இருக்கிறது.
அதன்பின்னர் கயிற்றில் தொங்கும்போது ரத்தக் கரை கொஞ்சமே இருக்கிறது. அதையும் கவனித்திருக்கலாமே.

நெருப்புடா.. தியேட்டர நெருங்குடா

கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷ்ணுவிஷால், விஜய்சேதுபதி, கேத்ரீன் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், அருள்தாஸ், மற்றும் பலர்.
இயக்கம் : சூப்பர் ஜீ புகழ் முருகானந்தம்
இசை : ஷான் ரோல்டான்
ஒளிப்பதிவு: லட்சுமணன்
எடிட்டர்: ஸ்ரீதரன்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : விஷ்ணுவிஷால்

கதைக்களம்…

ஊரு வம்பு நமக்கு எதுக்குடா? பிரச்சினைக்கு போகாதே என தன் மகன் விஷ்ணுவை பொத்திவைத்து வளர்த்து வருகிறார் அம்மா சரண்யா.

விஷ்ணுவுக்கு கேத்ரீன் மீது காதல்வர, பெண் பார்க்க செல்கின்றனர். ஆனால் ஒரு கோழைக்கு பெண்தர மறுக்கிறார் அவரின் அப்பா.

இதனால் விரக்தியில் இருக்கிறார் விஷ்ணு. இதனிடையில் தன் சகோதரியின் திருமண செலவுக்காக கிட்னியை ஆனந்த்ராஜீக்கு விற்க சம்மதிக்கிறார்.

அதன்பின் நடக்கும் சம்பவங்களை நகைக்சுவையாக கொடுத்துள்ளார் இந்த கதாநாயகன் குழுவினர்.

கேரக்டர்கள்…

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஸ்டைலில் அடுத்த ஹிட்டையும் கொடுக்க நினைத்துள்ளார் புரொடியூசர் கம் ஹீரோ விஷ்ணுவிஷால்.

கேரக்டருக்கு ஏற்ற அலட்டிக்கொள்ளாத நடிப்பு. ஆனால் பயப்படும் காட்சிகளில் முகபாவனைகளில் நடிப்பு அனுபவத்தை காட்டியிருக்கலாம்.

காஷ்மீர் ஆப்பிள் போன்ற முகம், வாழைத்தண்டு கால்கள் என படு ப்ரெஸ்ஸாக வருகிறார் கேத்ரீன்.

நீயெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா ஃபர்ஸ்ட நைட் பண்ற ஆளா?’ என விஷ்ணுவை கேத்ரீன் கேட்கும் காட்சிகளில் நம்மையும் சூடேற்றுகிறார். (இந்த பொண்னுங்களே இப்படித்தான்)

காதல் கண் கட்டுதே படத்தில் நம்மை ஈர்த்த அதுல்யா இதில் தோழி கேரக்டரில் வருகிறார். சில நிமிடமே என்றாலும் இதிலும் கவர்கிறார்.

சூரிக்கு சில கதாநாயகன்களுடன் மட்டுமே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். அதில் ஒருவராக விஷ்ணு வை சொல்லலாம்.

சூரி மொபைலுக்கு விஷ்னு ஐ லவ் யூ மேசேஜ் அனுப்பும்போது அங்கு சூரியும் அவரது மனைவியும் செய்யும் ரகளை ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாதியில் சூரி கிட்னியை பறிகொடுக்கும் காட்சிகளும், மொட்டை ராஜேந்திரன் பாடும் காட்சிகளில் சிரிப்பை கன்ட்ரோல் செய்ய முடியாது.

ஆனால் மொட்டை ராஜேந்திரன் ஒரே மாதிரியான ரோல்களை தவிர்ப்பது நலம்.

ஆனந்த்ராஜ் வந்தபிறகு படத்தின் காமெடி அதிகமாக களைகட்டுகிறது. அசத்தல் சார்.

கௌரவ டாக்டராக வருகிறார் விஜய்சேதுபதி. அவர் ஸ்கோர் செய்தாலும், தற்போது முன்னணி நடிகராக இருக்கும் அவரை இந்த சிறிய கேரக்டருக்கு பயன்படுத்தியிருக்க வேண்டாமே என தோன்ற வைக்கிறது.

இதுபோன்று குழப்பமாக பேசும் காட்சிகளில் பார்த்திபன், அல்லது எஸ்.ஜே.சூர்யாவை பயன்படுத்தி இருக்கலாமே எனவும் யோசிக்க வைக்கிறது.

அருள்தாஸ் மற்றும் சிங்கம் பாஸ் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

உன் நெனப்பு, டப்பு டிப்பு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமாக இருந்தாலும் டாஸ்மாக் பார் சண்டைக்காட்சிக்கு பொருந்தவில்லை. இரைச்சலாக உள்ளது.

மேலும் அதுநாள் வரை டம்மியாக இருக்கும் ஹீரோ திடீரென எல்லாரையும் அடிப்பது ரொம்ப ஓவர்.
ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு கைகொடுத்துள்ளது.

இயக்கம் பற்றி அலசல்…

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மரகத நாணயம் என சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள முருகானந்தம், இந்த படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இவரின் பிரபலமான சூப்பர் ஜீ டயலாக்கை படத்தில் ஒரு கடைக்கு வைத்துள்ளது கவனிக்க வைக்கிறது.

இயக்குனர் ஒரு காட்சியில் வருகிறார். இவரும் நடித்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

காமெடி படம் என்றால் லாஜிக் வேண்டாம் நினைத்துவிட்டார் போல. எல்லாவற்றையும் காமெடியாகவே கொடுத்துவிட்டார்.

கதாநாயகன்… காமெடி நாயகன்

காதல் கசக்குதய்யா

காதல் கசக்குதய்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : துருவா, வெண்பா, சார்லி கல்பனா, லிங்கா, ஜெயசந்திரன் மற்றும் பலர்.
இயக்கம் : துவாரக்ராஜா
இசை : தரன்குமார்
ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்
எடிட்டர்: முனிஷ்
கலை: ரமேஷ்
பி.ஆர்.ஓ. : வின்சன் சி.எம்.
தயாரிப்பு : மதியழகன், ரம்யா (எட்ஸ்ட்ரா எண்டர்டெயின்மெண்ட்)

கதைக்களம்…

பார்த்த உடனே சிலரை லவ் செய்ய தோனும் அல்லவா? அதுபோல் ஹீரோ துருவாவை பார்த்த உடனே +2 மாணவி வெண்பாவுக்கு காதல் வருகிறது.

துருவாவுக்கும் காதல் வந்தாலும் அவள் பள்ளி மாணவி, ரொம்ப குள்ளம் என்பதால் வெளிக்காட்ட முடியாமல் தவிக்கிறார்.

மேலும் இருவருக்கும் 8 வயது வித்தியாசம் வேற. இதனால் நண்பர்கள் கிண்டலடிக்க, மறைத்து மறைத்து லவ் செய்கிறார்.

இந்த ஒன்லைனை வைத்து படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சொல்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா.

கேரக்டர்கள்…

வயது குறைவான, குள்ளமான பெண்ணை லவ் செய்யும் போது துருவா துறுதுறு. தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் இவர். இதில் கதையின் நாயகியாக வந்துள்ளார். வார்ம் வெல்கம் வெண்பா.

நடிப்பிலும் அழகிலும் க்யூட் பெண் வெண்பா. ஸ்கூல் யூனிபார்மிலும் கலர் டிரெஸ்ஸிலும் தன் பப்பி காதலை சொல்லும் இடங்களில் ரசிக்க வைக்கிறார்.

18வயதுக்குள் காதல் வந்தால் பெண்கள் என்ன செய்வார்கள்? என்பதை ரசிக்கும்படி செய்திருக்கிறார் வெண்பா.

ஹீரோவின் நண்பர்களாக வரும் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள். ஹீரோவை கிண்டலடிப்பது முதல் கருத்து புதுசு என்பது வரை ஜாலியாக கொண்டு செல்கிறார்கள்.

வெண்பாவின் அப்பாவாக சார்லி சபாஷ் போட வைக்கிறார்.

துருவாவின் அம்மாவாக கல்பனா. இவர் நடித்த கடைசிப்படம் இதுதானாம். கோமாவில் இருந்து மீண்டு வந்த பிறகு மகனை பார்க்கும் காட்சிகள் கல்பனா கலக்கல்.

தாய்மாமனாக வரும் ஜெயச்சந்திரன் மிடுக்கு. நடிப்பிலும் ஜெயமே. ஆட்டோ டிரைவர், பள்ளி மாணவர்கள் என அனைவரும் அருமையான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு சில பார்த்த காட்சிகள் என்றாலும் அதை தன் ஒளிப்பதிவின் மூலம் பாலாஜி சொல்லும் வகையில் கவர்கிறார்.
தரன்குமார் இசையில் பாடல்கள் ஓகே. துவாரக்ராஜா பாடல் வரிகளும்.

அட என்னப்பா? இந்த ஹீரோ இப்படி தம் அடிக்கிறாரு என ஆடியன்சே கவலைப்படும் அளவுக்கு ஊதி தள்ளுகிறார் ஹீரோ.

ஆனால் ஹீரோவை பார்த்து அம்மாவும் காதலியும் உன்னையும் கொன்னு, என்னையும் கொன்னுடாதே என கேட்கும் காட்சிகள் அருமை. இதன்பின்னராவது புகை பிடிப்பவர்கள் திருந்தினால் சரி.

நிறைய தம் அடிப்பவர்களால் நிறைய ஓட முடியாது என சொல்லும் காட்சிகளும் பின்னர் தம் பற்ற வைக்கும் காட்சிகளும் அருமை.

காதல் கசக்குதய்யா… காதல் என்றும் கசக்காது

புரியாத புதிர் விமர்சனம்

புரியாத புதிர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, காயத்ரி, மகிமாநம்பியார், ரமேஷ்திலக், அர்ஜீனன் மற்றும் பலர்.
இயக்கம் : ரஞ்சித் ஜெயக்கொடி
இசை : சிஎஸ் ஷாம்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டர்: பவன்ஸ்ரீகுமார்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு : ஜே. சதீஷ்குமார்

puriyatha puthir movie stills (8)

கதைக்களம்…

படத்தின் முதல்காட்சிலேயே ஒரு கல்லூரியின் உயரமான கட்டிடத்தில் இருந்து ஒரு மாணவி தற்கொலை செய்துக் கொள்கிறார். ஏன்? என்ற புரியாத புதிரோடு கதை விரிகிறது.

ஒரு சாலையில் காயத்ரியை பார்க்கும் விஜய்சேதுபதி அவர் மீது காதல் கொள்கிறார்.

பின்னர் அவரும் காதலிக்கிறார். இந்த நிலையில் விஜய்சேதுபதியின் மொபைலுக்கு காயத்ரியின் அந்தரங்கமான படங்கள் வருகிறது.

உடை மாற்றும் காட்சி, குளியல் காட்சி உள்ளிட்ட காட்சிகள். ஆனால் அந்த போனை இவர் தொடர்பு கொண்டு பேச முடியாமல் தவிக்கிறார்.

போலீசில் சொன்னாலும் தன் காதலி அசிங்கப்பட வேண்டிய சூழ்நிலை வரும் என்பதால் தானே அந்த நபரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

தான் சொன்னதை செய்தால் அந்த வீடியோவை இணையத்தில் அப்லோட் செய்யமாட்டேன் என்கிறார் அந்த மர்ம நபர்.

அவர் என்ன சொன்னார்? அவர் சொன்னதையெல்லாம் விஜய்சேதுபதி நிறைவேற்றினாரா? தன் காதலியை காப்பாற்றினாரா? இவரையும் காயத்ரியையும் அந்த நபர் பழிவாங்க என்ன காரணம்? என்பதை இந்த புரியாத புதிர்கள் சொல்லும்.

puriyatha puthir movie stills

கேரக்டர்கள்…

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் விஜய்சேதுபதி இதிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

மர்ம நபர் யார்? என்று தெரியாமல் குழம்பி தவிக்கும் காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

எந்த இமேஜ்ஜீம் தனக்கு வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறார். இதே ரூட்டில் பயணித்தால் இதுபோன்ற வித்தியாசமான படங்கள் இவரிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கலாம்.

விஜய்சேதுபதி காயத்ரி கெமிஸ்ட்ரி இதிலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

யதார்த்த பெண்ணாக மிகையில்லாத நடிப்பில் கவர்கிறார் காயத்ரி. தோழி, காதலி என இரண்டிலும் இந்த இரண்டிலும் நிறைவான நடிப்பு.

எவருமே எதிர்பாரா கேரக்டரில் மகிமா நம்பியார். சிறிய வேடம் என்றாலும் படத்தின் அச்சாணி இவர்தான்.

இவருடன் ரமேஷ்திலக், அர்ஜீனன் ஆகியோரும் உண்டு.

puriyatha puthir movie stills (2)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடலின் வரிகள் பாடலுக்கு பலம் சேர்த்துள்ளன. ஷாமின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

உயரமான கட்டிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், தற்கொலை காட்சிகள் மனதை பதற வைக்கிறது. ஒளிப்பதிவாளர் எடிட்டரும் தங்கள் பணியை நிறைவாக செய்துள்ளனர்.

puriyatha puthir movie stills (6)

இயக்கம் பற்றிய அலசல்…

இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப ஒரு படத்தை கொடுத்துள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.

2003ல் வந்த விசில் படத்தின் சாயல் இதில் கொஞ்சம் கலந்து இருக்கிறது. மேலும் அண்மையில் வெளியான லென்ஸ் பிரதிபலிப்பும் இருக்கிறது.

ஆனால் ஒரு ரொமான்டிக் மற்றும் த்ரில்லர் கலந்து இந்த புரியாத புதிரை சிறப்பாக செய்திருக்கிறார்.

எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் அது தன் வீட்டில் நடக்கும்போது அந்த வலி தெரியும்.

ஒருவரின் அந்தரங்கத்தையும் பார்ப்பதும் அதை இணையத்தில் பரப்புவதும் பெரும் குற்றம். அதனால் எத்தனை குடும்பங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணம்.

விளையாட்டாக நம் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து வைத்தாலும் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கும் விளக்கமளித்திருக்கிறார்.

இதை பார்த்து சில விஷமிகள் திருந்தினால் அதுவே இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி.

புரியாத புதிர்…. அந்தரங்க விபரீதம்

ஒரு கனவு போல விமர்சனம்

ஒரு கனவு போல விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராமகிருஷ்ணன், சௌந்தரராஜா, அமலாரோஸ், அருள்தாஸ், சார்லி மற்றும் பலர்.

இயக்கம் : விஜய்சங்கர்
இசை : ஈஎஸ் ராம்
ஒளிப்பதிவு அழகப்பன்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி
தயாரிப்பு : செல்வகுமார்

கதைக்களம்…

சிறுவயது முதலே ராமகிருஷ்ணனும் சவுந்தரராஜனும் நண்பர்கள்.

சவுந்தரராஜன் ஒரு சிறந்த பாடகராக வளர வேண்டும் என நினைக்கிறார். அவருக்கான எல்லா உதவிகளையும் லாரி ஓட்டி சம்பாரித்து செய்துவருகிறார் ராமகிருஷ்ணன்.

இந்நிலையில் ராமகிருஷ்ணனுக்கு பெண் (அமலாரோஸ்) பார்க்க செல்கிறார் சவுந்தரராஜன்.

ஆனால் பெண் வீட்டார் மறுக்கவே, சவுந்தரராஜன் வற்புறுத்தி சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைக்கிறார்.

ஒரு நாள் சவுந்தரராஜனுக்கு உடல்நிலை சரியில்லாத போது சூழ்நிலை காரணமாக ராமகிருஷ்ணன் வீட்டில் தங்க நேரிடுகிறது.

அப்போது வேலை காரணமாக ராமகிருஷ்ணன் வெளியில் செல்கிறார்.

அந்த சமயத்தில் சவுந்தரராஜன் அமலாரோஸை பயத்தினால் அறியாமல் தொடுகிறார்.

அதுமுதல் அவருக்குள் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அமலாரோஸ் கணவருக்கும் அவரின் நண்பருக்கும் நடுவில் சிக்கி தவிக்கிறார்.

அதன்பின் என்ன நடந்தது? நட்புக்குள் விரிசல் வந்ததா? கணவன் மனைவி உறவு என்ன ஆனது? என்பதை யாருடைய மனதை புண்படுத்தாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்சந்தர்.

DH0O53pUIAAQ9vy

கேரக்டர்கள்…

ராமகிருஷ்ணன் மிகவும் யதார்த்தமாக அப்பாவியாக வருகிறார். நண்பனை பிரிய முடியாமல் இவர் படும் வேதனைகள் உண்மையான நட்பை காட்டும்.

நண்பனின் மனைவியை தெரியாமல் தொட்டதால் படும் அவஸ்தை உணர்வுபூர்வமாக காட்டியிருக்கிறார் சவுந்தரராஜன். அதுமுதல் இவர் ஒதுங்கி வேதனைப்படும் காட்சிகள் இவருக்கு பேர் வாங்கித் தரும்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு நடிக்க தெரிந்த நடிகையாக கிடைத்திருக்கிறார் அமலாரோஸ். ஒரு முதிர்ச்சியான கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் என தட்டி செல்கிறார்.

கணவனுக்கும் அவரது நண்பனுக்கும் இடையில் இவர் மாட்டிக் கொண்டு தவிக்கும் தவிப்பை கண்களிலேயே காட்டுகிறார். அமலாரோஸ் அருமை.

இவர்களுடன் சார்லி, அருள்தாஸ் ஆகியோரும் கேரக்டர்களும் நிறைவு தரும்.

DHvllfpV0AAwt58

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களும் அதன் வரிகளும் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். இது போன்ற வரிகள் அடங்கிய பாடல்களை கேட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும்.

அதுவும் ஓடும் நீரில்… பாடல் ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்று முடிச்சு படத்தை நினைவு படுத்தும்.

அதுபோல் பெற்ற தாயினை, கடவுள் சேர்த்து வச்ச, வான் என்றும்.. பாடல்கள் நம்மை மெய் மறக்க செய்யும்.

பொதுவாக மனைவியை தாயின் மறு உருவம் என்று பலபேர் சொல்லி கேட்டிருப்போம்.

ஆனால் இதில் கணவனை அடுத்த தந்தையாக பாடியிருப்பார்கள்.

அழகப்பனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. அதை அருமையாக எடிட்டிங் செய்தவரை பாராட்டலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் கானும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆனால் சில காட்சிகளில் நாடகத்தன்மை காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

நண்பனுக்காக பாதிரியாரிடம் அடி வாங்குவதும், கையில் நண்பனை தாங்குவது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

எல்லாம் காட்சிகளை சொல்லி வைத்தாற் போல இல்லாமல் ட்விஸ்ட் வைத்திருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஒரு கனவு போல… ஒரு கவிதை போல ஒரு படம்

More Articles
Follows